• May 18 2024

தலைமன்னாரிலிருந்து பாக்ஜலசந்தி கடலை 10 மணிநேரத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்த இந்தியர்கள்..!

Chithra / May 5th 2024, 12:00 pm
image

Advertisement



இலங்கை தலைமன்னாரிலிருந்து -  தனுஷ்கோடி வரை பாக்ஜலசந்தி கடலை 10 மணிநேரம் 10 நிமிடங்களில் 12  நீச்சல் வீர, வீராங்கணைகள்  நீந்தி சாதனை படைத்துள்ளனர்.

மகராஸ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த 12   நீச்சல் வீர வீராங்கணைகள்  இரண்டு  குழுக்களாக  பிரிந்து, இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு வரை உள்ள சுமார் 30 கி.மீ தொலைவிலான பாக்ஜலசந்தி கடற்பரப்பினை நீந்தி கடப்பதற்காக இந்திய வெளியுறவுதுறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்புதுறை அமைச்சகத்திற்கு  அனுமதி  கோரியிருந்தனர்.

இந்திய - இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில், நேற்றுமுன்தினம்  பிற்பகல் ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து இரண்டு படகுகளில் தங்கள் நீச்சல் பயிற்சியாளர் தலைமையில் மீனவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் இலங்கை தலைமன்னாரை வந்தடைந்தனர்.

தலைமன்னாரிலிருந்து நேற்று காலை 6.30 மணிக்கு கடலில்  நீந்த தொடங்கிய 12 பேரும் மாலை  4.40 மணியளவில் (10 மணி நேரம் 20 நிமிடங்களில் நீந்தி) தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியை சென்றடைந்தனர்

இவ்வாறு நீந்தி சாதனை படைத்தவர்களை சுங்கத்துறை, மரைன் போலீசார், சுற்றுலாப்பயணிகள் அரிச்சல்முனையில் வரவேற்றனர்.

 


தலைமன்னாரிலிருந்து பாக்ஜலசந்தி கடலை 10 மணிநேரத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்த இந்தியர்கள். இலங்கை தலைமன்னாரிலிருந்து -  தனுஷ்கோடி வரை பாக்ஜலசந்தி கடலை 10 மணிநேரம் 10 நிமிடங்களில் 12  நீச்சல் வீர, வீராங்கணைகள்  நீந்தி சாதனை படைத்துள்ளனர்.மகராஸ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த 12   நீச்சல் வீர வீராங்கணைகள்  இரண்டு  குழுக்களாக  பிரிந்து, இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு வரை உள்ள சுமார் 30 கி.மீ தொலைவிலான பாக்ஜலசந்தி கடற்பரப்பினை நீந்தி கடப்பதற்காக இந்திய வெளியுறவுதுறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்புதுறை அமைச்சகத்திற்கு  அனுமதி  கோரியிருந்தனர்.இந்திய - இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில், நேற்றுமுன்தினம்  பிற்பகல் ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து இரண்டு படகுகளில் தங்கள் நீச்சல் பயிற்சியாளர் தலைமையில் மீனவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் இலங்கை தலைமன்னாரை வந்தடைந்தனர்.தலைமன்னாரிலிருந்து நேற்று காலை 6.30 மணிக்கு கடலில்  நீந்த தொடங்கிய 12 பேரும் மாலை  4.40 மணியளவில் (10 மணி நேரம் 20 நிமிடங்களில் நீந்தி) தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியை சென்றடைந்தனர்இவ்வாறு நீந்தி சாதனை படைத்தவர்களை சுங்கத்துறை, மரைன் போலீசார், சுற்றுலாப்பயணிகள் அரிச்சல்முனையில் வரவேற்றனர். 

Advertisement

Advertisement

Advertisement