உலகில் வாழும் மக்களில் ஆறில் ஒருவர் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது மலட்டுத் தன்மையால் பாதிக்கப்பட்டிருப்பர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அறிக்கையிலே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மலட்டுத் தன்மை தொடர்பாக மேலும் ஆக்க பூர்வமான தகவல்களைத் தொடர்ந்தும் திரட்டுமாறும் உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.
1990 லிருந்து 2021ஆம் ஆண்டிற்கு இடையே வெளியான புள்ளி விவரங்கள் ஆராயப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
உலகில் 17.5 விழுக்காட்டுப் பெரியவர்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்பதையும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நடுத்தர, குறைந்த வருமான நாடுகளை விட அதிக வருமானம் வழங்கப்படும் நாடுகளில் அதிக பாதிப்பு இருப்பதும் அறிக்கையில் தெரியவந்துள்ளது.
கருத்தடை முறைகள் ஏதுமின்றி குறைந்தது 12 மாதங்களுக்கு பாலியல் உறவில் ஈடுபட்ட பிறகும் கரு உருவாகாவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மலட்டுத் தன்மைக்கு ஆளானவர்கள் என்று உலகச் சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளதுடன் ஆண், பெண் இருபாலாருக்கும் அது பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.
உலகில் ஆறில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை- உலக சுகாதார நிறுவனம் பகீர்samugammedia உலகில் வாழும் மக்களில் ஆறில் ஒருவர் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது மலட்டுத் தன்மையால் பாதிக்கப்பட்டிருப்பர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அறிக்கையிலே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மலட்டுத் தன்மை தொடர்பாக மேலும் ஆக்க பூர்வமான தகவல்களைத் தொடர்ந்தும் திரட்டுமாறும் உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. 1990 லிருந்து 2021ஆம் ஆண்டிற்கு இடையே வெளியான புள்ளி விவரங்கள் ஆராயப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உலகில் 17.5 விழுக்காட்டுப் பெரியவர்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்பதையும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நடுத்தர, குறைந்த வருமான நாடுகளை விட அதிக வருமானம் வழங்கப்படும் நாடுகளில் அதிக பாதிப்பு இருப்பதும் அறிக்கையில் தெரியவந்துள்ளது.கருத்தடை முறைகள் ஏதுமின்றி குறைந்தது 12 மாதங்களுக்கு பாலியல் உறவில் ஈடுபட்ட பிறகும் கரு உருவாகாவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மலட்டுத் தன்மைக்கு ஆளானவர்கள் என்று உலகச் சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளதுடன் ஆண், பெண் இருபாலாருக்கும் அது பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.