• Sep 20 2024

அறிவார்ந்த மக்கள் ராஜபக்சர்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள்! மொட்டு நம்பிக்கை

Chithra / Feb 7th 2023, 10:20 am
image

Advertisement

அரசியல் களத்தில் பொதுஜன பெரமுனவிற்கு எந்த அரசியல் கட்சிகளும் சவால் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி நாட்டில் எவ்வாறான நிலையை தோற்றுவித்தனர் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

மக்கள் விடுதலை முன்னணியினருக்கு மக்கள் மத்தியில் செல்ல முடியாத காரணத்தினால் தான் அவர்கள் தேசிய மக்கள் சக்தி என்று பெயரை மாற்றிக் கொண்டு செல்கிறார்கள்.

ராஜபக்சர்கள் நாட்டுக்கு தீங்கிழைக்கவில்லை. அளப்பரிய சேவையாற்றியுள்ளார்கள். அறிவார்ந்த மக்கள் ராஜபக்சர்களுக்கு  தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக ரோஹித அபேகுணவர்தன குறிப்பிடுகின்றார்.

நாட்டு மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு மீண்டும் ஆட்சியதிகாரத்தை வழங்குவார்கள்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமா என்பது குறித்து தனிப்பட்ட முறையில் அவதானம் செலுத்த வேண்டும். வெற்றியோ, தோல்வியோ தேர்தலில் போட்டியிடுவோம்.

தேர்தலை கண்டு அஞ்வச வேண்டிய தேவை எமக்கு கிடையாது. பொதுஜன பெரமுன 2018 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற தேசிய தேர்தல்களில் அமோக வெற்றிப்பெற்றது. இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் அமோக வெற்றிப் பெறுவோம்.

அறிவார்ந்த மக்கள் ராஜபக்சர்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள் மொட்டு நம்பிக்கை அரசியல் களத்தில் பொதுஜன பெரமுனவிற்கு எந்த அரசியல் கட்சிகளும் சவால் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.மக்கள் விடுதலை முன்னணி நாட்டில் எவ்வாறான நிலையை தோற்றுவித்தனர் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.மக்கள் விடுதலை முன்னணியினருக்கு மக்கள் மத்தியில் செல்ல முடியாத காரணத்தினால் தான் அவர்கள் தேசிய மக்கள் சக்தி என்று பெயரை மாற்றிக் கொண்டு செல்கிறார்கள்.ராஜபக்சர்கள் நாட்டுக்கு தீங்கிழைக்கவில்லை. அளப்பரிய சேவையாற்றியுள்ளார்கள். அறிவார்ந்த மக்கள் ராஜபக்சர்களுக்கு  தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக ரோஹித அபேகுணவர்தன குறிப்பிடுகின்றார்.நாட்டு மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு மீண்டும் ஆட்சியதிகாரத்தை வழங்குவார்கள்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமா என்பது குறித்து தனிப்பட்ட முறையில் அவதானம் செலுத்த வேண்டும். வெற்றியோ, தோல்வியோ தேர்தலில் போட்டியிடுவோம்.தேர்தலை கண்டு அஞ்வச வேண்டிய தேவை எமக்கு கிடையாது. பொதுஜன பெரமுன 2018 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற தேசிய தேர்தல்களில் அமோக வெற்றிப்பெற்றது. இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் அமோக வெற்றிப் பெறுவோம்.

Advertisement

Advertisement

Advertisement