பெரும்போக நெற்செய்கையின் போது எதிர்பார்த்தளவு விளைச்சல் கிடைக்காமையினால் எதிர்வரும் காலங்களில் அரிசியை இறக்குமதி செய்வதற்கான நிலை ஏற்படும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மரம்பே தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கருத்துரைத்த பேராசிரியர்,
350,000 மெற்றிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், இதுவரை அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
இதனிடையே, நாட்டின் சில பகுதிகளில் சிறுபோகத்துக்காக பயிரிடப்பட்ட நெல் செழிப்பாக வளர்ச்சியடையவில்லை என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சிறுபோக நெற்செய்கைக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உரத்தின் தரத்தில் ஏற்பட்ட மாற்றமே இதற்கு காரணம் என விவசாயிகள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடா பேராசிரியர் விடுத்த எச்சரிக்கை பெரும்போக நெற்செய்கையின் போது எதிர்பார்த்தளவு விளைச்சல் கிடைக்காமையினால் எதிர்வரும் காலங்களில் அரிசியை இறக்குமதி செய்வதற்கான நிலை ஏற்படும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மரம்பே தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கருத்துரைத்த பேராசிரியர்,350,000 மெற்றிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.இந்தநிலையில், இதுவரை அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். இதனிடையே, நாட்டின் சில பகுதிகளில் சிறுபோகத்துக்காக பயிரிடப்பட்ட நெல் செழிப்பாக வளர்ச்சியடையவில்லை என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.சிறுபோக நெற்செய்கைக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உரத்தின் தரத்தில் ஏற்பட்ட மாற்றமே இதற்கு காரணம் என விவசாயிகள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.