• Jun 20 2025

இஸ்ரேல்- காசா சமாதான பேச்சுவார்த்தை; இலங்கை ஆதரவளிக்க வேண்டும்- நிசான் காரியப்பர் வேண்டுகோள்..!

Sharmi / Jun 19th 2025, 1:56 pm
image

இஸ்ரேல்- காசா இடையேயான சமாதான பேச்சுவார்த்தைக்கு இலங்கை ஆதரவளிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்  நிசான் காரியப்பர் தெரிவித்தார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்ப கூடாது இஸ்ரேலிய உல்லாச பயணிகளை அனுமதிக்க கூடாது என நாங்கள் குறிப்பிட்டோம்.

எனவே சில ஊழல்கள் மில்லியன் கணக்கான பணம் என்பன துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளன. எனவே இது தொடர்பில் பாரதூரமான விடயத்தை இந்த சபையில் எழுப்பியிருந்தோம்.

இது ஒரு உலக யுத்தம் ஒன்றுக்கு போய்க்கொண்டு இருக்கின்றது.

அத்துடன் இஸ்ரேலின் காசாவில் மிலேச்சத்தனமான முடிவில்லாத தாக்குதல் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

எனவே அது பல பிரச்சனைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

அதேவேளை ஐக்கிய நாடுகள் சபை 'இஸ்ரேலுக்கு அரசியல் ரீதியாகவும் இராணுவ  ரீதியாகவும் வழங்கப்படும் ஆதரவுகள் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்' என  குறிப்பிடுகின்றது.

உலகளாவிய நீதி காசாவில் நிலைநிறுத்தப்பட வேண்டும்.

எனவே பலஸ்தீனியர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு தவறிவிட்டோம்.

எனவே இது யுத்தத்திற்கு இட்டுச்செல்கின்றது.

அத்துடன் இரண்டு நாடுகளுக்கும் இடையே யுத்தநிறுத்தத்திற்கு நாங்கள் கோர வேண்டும். அது இடம்பெறவில்லை.

எனவே நாம் உண்மையான சமாதான பேச்சுவார்த்தைக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இஸ்ரேல்- காசா சமாதான பேச்சுவார்த்தை; இலங்கை ஆதரவளிக்க வேண்டும்- நிசான் காரியப்பர் வேண்டுகோள். இஸ்ரேல்- காசா இடையேயான சமாதான பேச்சுவார்த்தைக்கு இலங்கை ஆதரவளிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்  நிசான் காரியப்பர் தெரிவித்தார்.இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்ப கூடாது இஸ்ரேலிய உல்லாச பயணிகளை அனுமதிக்க கூடாது என நாங்கள் குறிப்பிட்டோம்.எனவே சில ஊழல்கள் மில்லியன் கணக்கான பணம் என்பன துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளன. எனவே இது தொடர்பில் பாரதூரமான விடயத்தை இந்த சபையில் எழுப்பியிருந்தோம்.இது ஒரு உலக யுத்தம் ஒன்றுக்கு போய்க்கொண்டு இருக்கின்றது.அத்துடன் இஸ்ரேலின் காசாவில் மிலேச்சத்தனமான முடிவில்லாத தாக்குதல் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.எனவே அது பல பிரச்சனைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.அதேவேளை ஐக்கிய நாடுகள் சபை 'இஸ்ரேலுக்கு அரசியல் ரீதியாகவும் இராணுவ  ரீதியாகவும் வழங்கப்படும் ஆதரவுகள் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்' என  குறிப்பிடுகின்றது.உலகளாவிய நீதி காசாவில் நிலைநிறுத்தப்பட வேண்டும்.எனவே பலஸ்தீனியர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு தவறிவிட்டோம்.எனவே இது யுத்தத்திற்கு இட்டுச்செல்கின்றது.அத்துடன் இரண்டு நாடுகளுக்கும் இடையே யுத்தநிறுத்தத்திற்கு நாங்கள் கோர வேண்டும். அது இடம்பெறவில்லை.எனவே நாம் உண்மையான சமாதான பேச்சுவார்த்தைக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement