• Jun 19 2025

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் - சுகாதார, ஊடக துணை அமைச்சர் இடையே சந்திப்பு!

shanuja / Jun 19th 2025, 2:12 pm
image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் நாயகம் தூதர் இந்திரா மணி பாண்டே  மற்றும் சுகாதார  மற்றும் வெகுஜன ஊடக துணை அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி  இடையேயான சந்ததிப்பு இன்று (19) சுகாதார அமைச்சில் நடைபெற்றது. 


இது தொடர்பில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சால் அனுப்பி வைக்கப்பட்ட ஊடக அறிக்கையில் உள்ளதாவது, 


நாட்டின் இலவச சுகாதார அமைப்பு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட முக்கிய ஒத்துழைப்புத் துறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. 


நாட்டின் இலவச சுகாதார அமைப்பு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறைகளை முன்னேற்றுவதற்கான அரசாங்கத்தின் புது முயற்சிகளுக்கு பொதுச் செயலாளர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். 


மேலும், மேற்கத்திய மற்றும் உள்நாட்டு மருத்துவத் துறைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்களை மேம்படுத்த பிம்ஸ்டெக் மற்றும் இலங்கைக்கு இடையிலான எதிர்கால ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை தெரிவித்தார்.


பிம்ஸ்டெக் இன் முயற்சிகளுக்கும் ஒத்துழைப்புக்கும் மற்றும் பங்களிப்புக்களுக்கும் அதன் பொதுச்செயலாளர்,  தூதர் அம்ப் இந்திரா மணி பாண்டே மற்றும் அவரது ஊழியர்களுக்கு சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை துணை அமைச்சர் நன்றி தெரிவித்தார். 


மேலும் பிம்ஸ்டெக் குழுவில் பங்களாதேஷ், இந்தியா, மியான்மார், இலங்கை, தாய்லாந்து, பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய 7 நாடுகளும் அடங்கும். - என்றுள்ளது.

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் - சுகாதார, ஊடக துணை அமைச்சர் இடையே சந்திப்பு பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் நாயகம் தூதர் இந்திரா மணி பாண்டே  மற்றும் சுகாதார  மற்றும் வெகுஜன ஊடக துணை அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி  இடையேயான சந்ததிப்பு இன்று (19) சுகாதார அமைச்சில் நடைபெற்றது. இது தொடர்பில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சால் அனுப்பி வைக்கப்பட்ட ஊடக அறிக்கையில் உள்ளதாவது, நாட்டின் இலவச சுகாதார அமைப்பு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட முக்கிய ஒத்துழைப்புத் துறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. நாட்டின் இலவச சுகாதார அமைப்பு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறைகளை முன்னேற்றுவதற்கான அரசாங்கத்தின் புது முயற்சிகளுக்கு பொதுச் செயலாளர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும், மேற்கத்திய மற்றும் உள்நாட்டு மருத்துவத் துறைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்களை மேம்படுத்த பிம்ஸ்டெக் மற்றும் இலங்கைக்கு இடையிலான எதிர்கால ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை தெரிவித்தார்.பிம்ஸ்டெக் இன் முயற்சிகளுக்கும் ஒத்துழைப்புக்கும் மற்றும் பங்களிப்புக்களுக்கும் அதன் பொதுச்செயலாளர்,  தூதர் அம்ப் இந்திரா மணி பாண்டே மற்றும் அவரது ஊழியர்களுக்கு சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை துணை அமைச்சர் நன்றி தெரிவித்தார். மேலும் பிம்ஸ்டெக் குழுவில் பங்களாதேஷ், இந்தியா, மியான்மார், இலங்கை, தாய்லாந்து, பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய 7 நாடுகளும் அடங்கும். - என்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement