• Jun 30 2024

ஜே.வி.பியினரே எமக்கு ஆயுதங்களை வழங்கினார்கள்...! அனுரவே பொறுப்புடன் கதையுங்கள்...! பிள்ளையான் சீற்றம்...!

Sharmi / Jun 28th 2024, 1:54 pm
image

Advertisement

ஜே.வி.பி கட்சியினரே எமக்கு ஆயுதம் வழங்கினார்கள் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன்  தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை மட்டக்களப்புக்கு விஜயம் செய்த ஜே.வி.பியின் தலைவர் மட்டக்களப்பில் பிள்ளையான் மக்களை அச்சுறுத்துவதாக தெரிவித்தமை தொடர்பாக ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியமைக்கு  பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

ஜேவிபி கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயகக்க அவர்களுக்கு தலை சரியில்லை, அவர்கள் தான் முதலில் எங்களுக்கு ஆயுதம் வழங்கியவர்கள், பின்பு எங்களிடம் மக்களை சுடுவதற்கென ஆயுதம் கேட்டார்கள். 

நான் அவர்களுக்கு ஆயுதம்  கொடுக்கவில்லை இவையெல்லாம் அந்த கட்சியில் வேறு ஒருவர் தலைவராக இருந்தபோது இடம்பெற்றது. 

மட்டக்களப்புக்கு வந்தால் அனுரகுமாரவை ஒரு தலைவராக பொறுப்புடன் கதைக்கப் பழகச் சொல்லுங்கள், அவர் ஜனாதிபதியாக வந்தவுடன் அதனை தேடிப் பார்க்கட்டும், அவர் மக்களை நான்  அச்சுறுத்துவதாகச் சொன்னால் மட்டக்களப்பில் அதிக வாக்குகளை பெற்றவர் நான். ஜனநாயகத்தைப் பற்றி கதைப்பவர்கள் பொறுப்பாக யோசித்து கதைக்க வேண்டும்.

நாட்டை தீக்குளிக்குள் தள்ளி பல்கலைக்கழக மாணவர்களை  வன்முறைக்கு தூண்டும் ஒரு கட்சி, நாட்டை அழிக்க செய்த ஒரு கட்சி எமது மண்ணில் இவ்வாறு கதைப்பது வேதனைக்குரிய விடயம்.

அவர்கள்தான் ஒரு பிரபல்யமான ஆயுதக் குழு, எமது கட்சிக்கு ஆரம்பத்தில் ஆயுதம் வழங்கியவர்கள் அவர்களே மீண்டும் எங்களிடம் ஆயுதம் கேட்டவர்கள் அவர்களே இவ்வாறான ஆயுதங்களை தேடிப் பார்க்க வேண்டுமென நான் அவரிடம் வேண்டுகோள் விடுகின்றேன் எனவும் தெரிவித்தார்.




ஜே.வி.பியினரே எமக்கு ஆயுதங்களை வழங்கினார்கள். அனுரவே பொறுப்புடன் கதையுங்கள். பிள்ளையான் சீற்றம். ஜே.வி.பி கட்சியினரே எமக்கு ஆயுதம் வழங்கினார்கள் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன்  தெரிவித்துள்ளார்.நேற்று மாலை மட்டக்களப்புக்கு விஜயம் செய்த ஜே.வி.பியின் தலைவர் மட்டக்களப்பில் பிள்ளையான் மக்களை அச்சுறுத்துவதாக தெரிவித்தமை தொடர்பாக ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியமைக்கு  பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.ஜேவிபி கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயகக்க அவர்களுக்கு தலை சரியில்லை, அவர்கள் தான் முதலில் எங்களுக்கு ஆயுதம் வழங்கியவர்கள், பின்பு எங்களிடம் மக்களை சுடுவதற்கென ஆயுதம் கேட்டார்கள்.  நான் அவர்களுக்கு ஆயுதம்  கொடுக்கவில்லை இவையெல்லாம் அந்த கட்சியில் வேறு ஒருவர் தலைவராக இருந்தபோது இடம்பெற்றது. மட்டக்களப்புக்கு வந்தால் அனுரகுமாரவை ஒரு தலைவராக பொறுப்புடன் கதைக்கப் பழகச் சொல்லுங்கள், அவர் ஜனாதிபதியாக வந்தவுடன் அதனை தேடிப் பார்க்கட்டும், அவர் மக்களை நான்  அச்சுறுத்துவதாகச் சொன்னால் மட்டக்களப்பில் அதிக வாக்குகளை பெற்றவர் நான். ஜனநாயகத்தைப் பற்றி கதைப்பவர்கள் பொறுப்பாக யோசித்து கதைக்க வேண்டும்.நாட்டை தீக்குளிக்குள் தள்ளி பல்கலைக்கழக மாணவர்களை  வன்முறைக்கு தூண்டும் ஒரு கட்சி, நாட்டை அழிக்க செய்த ஒரு கட்சி எமது மண்ணில் இவ்வாறு கதைப்பது வேதனைக்குரிய விடயம்.அவர்கள்தான் ஒரு பிரபல்யமான ஆயுதக் குழு, எமது கட்சிக்கு ஆரம்பத்தில் ஆயுதம் வழங்கியவர்கள் அவர்களே மீண்டும் எங்களிடம் ஆயுதம் கேட்டவர்கள் அவர்களே இவ்வாறான ஆயுதங்களை தேடிப் பார்க்க வேண்டுமென நான் அவரிடம் வேண்டுகோள் விடுகின்றேன் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement