கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இன்றையதினம் மேற்கொள்ளப்படும் பூரண ஹர்த்தாலால் முல்லைத்தீவு முற்றாக முடங்கியது.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ள இக் ஹர்த்தாலுக்கு பலதரப்பட்ட ஆதரவு வழங்கி ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் மாபெரும் பேரணியும் இன்னும் சற்று நேரத்தில் முல்லைத்தீவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.