• May 03 2024

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு...!

Sharmi / Mar 19th 2024, 3:08 pm
image

Advertisement

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் வருடாந்தம் நடாத்தும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நேற்றையதினம்(18)    மாலை பொலிஸ் நிலைய திறந்த வெளியரங்கில் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில்  கோலாகலமாக வான வேடிக்கையுடன் நடைபெற்றது.

இதன் போது நிகழ்வின்  பிரதம விருந்தினராக   கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கலாநிதி சட்டத்தரணி அஜித் ரோகண ஏனைய அதிதிகளாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம, அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  தமயந்த விஜய ஸ்ரீ ,கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் ,அரச சட்டவாதி எம்.ஏ.எம். லாபீர், கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத்அலி,கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம, கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்,இராணுவ , கடற்படை அதிகாரிகள்  பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் , உட்பட சர்வமத தலைவர்கள், மற்றும்  கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு குழு அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர் .

அத்துடன் இந்நிகழ்வு   இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவுடன் நிகழ்வு ஆரம்பமானது.

இதன் போது அதிகளவான மக்கள் கலந்து கொண்டதுடன் நிகழ்வின் நன்றி உரையினை சமூக பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம் வாஹீட் மேற்கொண்டார். 

 பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ரமழான் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அங்கிருந்த மக்களிடம் சிநேக பூர்வமான கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கலாநிதி சட்டத்தரணி அஜித் ரோகண பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கி  கௌரவிக்கப்பட்டுள்ளார்.இதன் போது கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு இன நல்லிணக்கம், பொதுமக்கள் தொடர்பாடல், போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டமைக்காக அம்பாறை மாவட்ட காணி மத்தியஸ்த சபையின் பிரதம மத்தியஸ்தரும் கல்முனை தலைமையக  பொலிஸ் ஆலோசனை குழுவின் பொதுச் செயலாளருமான எம்.ஐ .எம் ஜிப்ரி(எல்.எல்.பி) உள்ளிட்ட  பொலிஸ் ஆலோசனை குழு  உறுப்பினர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

மேலும்,  கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கலாநிதி சட்டத்தரணி அஜித் ரோகண , அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  தமயந்த விஜய ஸ்ரீ   அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  ,கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக ,கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் ,உள்ளிட்ட பொறுப்பதிகாரிகளுடன் பொதுமக்களின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.



கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு. கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் வருடாந்தம் நடாத்தும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நேற்றையதினம்(18)    மாலை பொலிஸ் நிலைய திறந்த வெளியரங்கில் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில்  கோலாகலமாக வான வேடிக்கையுடன் நடைபெற்றது.இதன் போது நிகழ்வின்  பிரதம விருந்தினராக   கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கலாநிதி சட்டத்தரணி அஜித் ரோகண ஏனைய அதிதிகளாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம, அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  தமயந்த விஜய ஸ்ரீ ,கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் ,அரச சட்டவாதி எம்.ஏ.எம். லாபீர், கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத்அலி,கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம, கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்,இராணுவ , கடற்படை அதிகாரிகள்  பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் , உட்பட சர்வமத தலைவர்கள், மற்றும்  கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு குழு அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர் .அத்துடன் இந்நிகழ்வு   இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவுடன் நிகழ்வு ஆரம்பமானது.இதன் போது அதிகளவான மக்கள் கலந்து கொண்டதுடன் நிகழ்வின் நன்றி உரையினை சமூக பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம் வாஹீட் மேற்கொண்டார்.  பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ரமழான் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அங்கிருந்த மக்களிடம் சிநேக பூர்வமான கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டார்.அத்துடன் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கலாநிதி சட்டத்தரணி அஜித் ரோகண பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கி  கௌரவிக்கப்பட்டுள்ளார்.இதன் போது கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு இன நல்லிணக்கம், பொதுமக்கள் தொடர்பாடல், போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டமைக்காக அம்பாறை மாவட்ட காணி மத்தியஸ்த சபையின் பிரதம மத்தியஸ்தரும் கல்முனை தலைமையக  பொலிஸ் ஆலோசனை குழுவின் பொதுச் செயலாளருமான எம்.ஐ .எம் ஜிப்ரி(எல்.எல்.பி) உள்ளிட்ட  பொலிஸ் ஆலோசனை குழு  உறுப்பினர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.மேலும்,  கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கலாநிதி சட்டத்தரணி அஜித் ரோகண , அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  தமயந்த விஜய ஸ்ரீ   அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  ,கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக ,கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் ,உள்ளிட்ட பொறுப்பதிகாரிகளுடன் பொதுமக்களின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement