நாய்க்குட்டி ஒன்றை திருடி விற்பனை செய்து அந்த பணத்தில் போதைப்பொருள் பெற்று உட்கொண்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்ட ஜெர்மன் ஷெப்பர்ட் ரக நாய்க்குட்டியை திருடிய நபர் அதனை 15 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனினும் நாய்க்குட்டியின் பெறுமதி சுமார் ஐம்பதாயிரம் ரூபா என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை கைது செய்து விசாரணைக்குட்படுத்திய போது, கோரல்வெல்ல பகுதியிலுள்ள வீடொன்றுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நாய்க்குட்டியினை பொலிசார் மீட்டுள்ளனர்.
சந்தேக நபர் மற்றுமொரு நபருடன் இணைந்து நாய்க்குட்டியை திருடியுள்ளதாகவும், தற்போது வேறு ஒரு வழக்கு தொடர்பில் அவர் சிறையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நாய்க்குட்டியை விற்பனை செய்து கிடைத்த பணத்தில் சந்தேகநபர்கள் போதைப்பொருள் உட்கொண்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாய்க்குட்டியை திருடி போதைபொருள் வாங்கிய கில்லாடி இளைஞர்கள் - சிக்கியது எவ்வாறு. samugammedia நாய்க்குட்டி ஒன்றை திருடி விற்பனை செய்து அந்த பணத்தில் போதைப்பொருள் பெற்று உட்கொண்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்ட ஜெர்மன் ஷெப்பர்ட் ரக நாய்க்குட்டியை திருடிய நபர் அதனை 15 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எனினும் நாய்க்குட்டியின் பெறுமதி சுமார் ஐம்பதாயிரம் ரூபா என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபரை கைது செய்து விசாரணைக்குட்படுத்திய போது, கோரல்வெல்ல பகுதியிலுள்ள வீடொன்றுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நாய்க்குட்டியினை பொலிசார் மீட்டுள்ளனர்.சந்தேக நபர் மற்றுமொரு நபருடன் இணைந்து நாய்க்குட்டியை திருடியுள்ளதாகவும், தற்போது வேறு ஒரு வழக்கு தொடர்பில் அவர் சிறையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.நாய்க்குட்டியை விற்பனை செய்து கிடைத்த பணத்தில் சந்தேகநபர்கள் போதைப்பொருள் உட்கொண்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.