போதையில் வாகனம் செலுத்திய மூன்று தனியார் பேருந்து சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹங்வெல்ல, பிடகொட, கடுவெல கோட்டை மற்றும் கொஹிலவத்த புரஹல ஆகிய பகுதிகளுக்கு இடையில் சேவையில் ஈடுபட்டிருந்த பேருந்துகளின் சாரதிகள் மூவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல சாரதிகள் மதுபோதையில் பேருந்துகளை ஓட்டிச் செல்வதாக கிடைத்த தகவலுக்கு அமைய இன்று திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
போதைப்பொருள் உட்கொண்டமை பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்ததுடன் பின்னர்
சட்ட வைத்திய அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்ட இரத்த மாதிரிகளும் உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மதுபோதையில் பேருந்துகளை செலுத்திய மூன்று சாரதிகள் கைது. அச்சத்தில் பயணிகள். samugammedia போதையில் வாகனம் செலுத்திய மூன்று தனியார் பேருந்து சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.ஹங்வெல்ல, பிடகொட, கடுவெல கோட்டை மற்றும் கொஹிலவத்த புரஹல ஆகிய பகுதிகளுக்கு இடையில் சேவையில் ஈடுபட்டிருந்த பேருந்துகளின் சாரதிகள் மூவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.பல சாரதிகள் மதுபோதையில் பேருந்துகளை ஓட்டிச் செல்வதாக கிடைத்த தகவலுக்கு அமைய இன்று திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.போதைப்பொருள் உட்கொண்டமை பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்ததுடன் பின்னர் சட்ட வைத்திய அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்ட இரத்த மாதிரிகளும் உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.