• May 03 2024

கசினோவாக மாறும் கோட்டா கோ கம - பகிரங்கப்படுத்திய விஜித ஹேரத்..!samugammedia

mathuri / Feb 20th 2024, 10:12 pm
image

Advertisement

 ‘கோட்டா கோ கம’ அரகலய போராட்டம் நடத்தப்பட்ட காலி முகத்திடலில் கசினோ மையத்தை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தேசிய பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் ஹேரத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், 

அரகலய தளத்தில் சூதாட்ட நிலையத்தை திறப்பதற்கு சீன பெயரைக் கொண்ட நிறுவனமொன்றுக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை (UDA) ஊடாக உரிமம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், நீர்கொழும்பில் உள்ள பிரபல சூதாட்டக்காரர் ஒருவர் இந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் பின்னணியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்த 'அரகலய தளம்', அரகலய மக்களை பழிவாங்குவதற்காக கசினோ நிலையமொன்றுக்காக வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதே வேளை, உள்ளூர் மக்களை இலக்கு வைத்து கசினோ நிலையங்கள் திறக்கப்பட மாட்டாது, கசினோவைத் திறக்கும்போது 10 பில்லியன் செலுத்த வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 

மேலும், உள்ளூர்வாசி ஒருவர் சூதாட்ட விடுதிக்குள் நுழையும் போது, ​​நுழைவுக் கட்டணமாக 50 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும், மேலும் அதை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. உள்ளூர்வாசிகள் சூதாட்ட விடுதிகளை ஆதரிப்பதை நாங்கள் ஊக்கப்படுத்தவில்லை. இந்த விடுதிகள் வெளிநாட்டினரை மட்டுமே இலக்காக கொண்டவை," என்றும்  அவர் கூறினார்.

கசினோவாக மாறும் கோட்டா கோ கம - பகிரங்கப்படுத்திய விஜித ஹேரத்.samugammedia  ‘கோட்டா கோ கம’ அரகலய போராட்டம் நடத்தப்பட்ட காலி முகத்திடலில் கசினோ மையத்தை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தேசிய பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் ஹேரத் குற்றஞ்சாட்டியுள்ளார்.இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், அரகலய தளத்தில் சூதாட்ட நிலையத்தை திறப்பதற்கு சீன பெயரைக் கொண்ட நிறுவனமொன்றுக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை (UDA) ஊடாக உரிமம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், நீர்கொழும்பில் உள்ள பிரபல சூதாட்டக்காரர் ஒருவர் இந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் பின்னணியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்த 'அரகலய தளம்', அரகலய மக்களை பழிவாங்குவதற்காக கசினோ நிலையமொன்றுக்காக வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதே வேளை, உள்ளூர் மக்களை இலக்கு வைத்து கசினோ நிலையங்கள் திறக்கப்பட மாட்டாது, கசினோவைத் திறக்கும்போது 10 பில்லியன் செலுத்த வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மேலும், உள்ளூர்வாசி ஒருவர் சூதாட்ட விடுதிக்குள் நுழையும் போது, ​​நுழைவுக் கட்டணமாக 50 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும், மேலும் அதை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. உள்ளூர்வாசிகள் சூதாட்ட விடுதிகளை ஆதரிப்பதை நாங்கள் ஊக்கப்படுத்தவில்லை. இந்த விடுதிகள் வெளிநாட்டினரை மட்டுமே இலக்காக கொண்டவை," என்றும்  அவர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement