• May 02 2024

மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானம் - வலியுறுத்தப்படும் பல்வேறு கோரிக்கைகள்..!samugammedia

mathuri / Feb 20th 2024, 10:07 pm
image

Advertisement

ஆசிரியர் – அதிபர் சங்கங்கள், சம்பள முரண்பாட்டை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”ஆசிரியர் அதிபர் பதவி உயர்வுகள் தொடர்பாக எந்த வேலைத்திட்டமும் இடம்பெறவில்லை. அவர்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர், ஆசிரியர் பதவியில் இருந்து அதிபர் வரை செல்லும் போது சம்பளம் குறைக்கப்படுகிறது.

இதேவேளை, ஒட்டுமொத்த கல்விமுறை பிரச்சனைகள் குறித்து கல்வி அதிகாரிகள் கவனம் செலுத்துவது இல்லை. எனவே  இவ்வாறான காரணங்களை வலியுறுத்தி  மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானம் - வலியுறுத்தப்படும் பல்வேறு கோரிக்கைகள்.samugammedia ஆசிரியர் – அதிபர் சங்கங்கள், சம்பள முரண்பாட்டை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”ஆசிரியர் அதிபர் பதவி உயர்வுகள் தொடர்பாக எந்த வேலைத்திட்டமும் இடம்பெறவில்லை. அவர்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர், ஆசிரியர் பதவியில் இருந்து அதிபர் வரை செல்லும் போது சம்பளம் குறைக்கப்படுகிறது.இதேவேளை, ஒட்டுமொத்த கல்விமுறை பிரச்சனைகள் குறித்து கல்வி அதிகாரிகள் கவனம் செலுத்துவது இல்லை. எனவே  இவ்வாறான காரணங்களை வலியுறுத்தி  மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement