விடுதலைப்போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்து வாழும் வரலாறாக வாழ்ந்து கொண்டிருப்பவருமான
மாமனிதர் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் "விலங்கை உடைத்து" என்னும் தன் வரலாற்று நூல் அறிமுக விழா இலண்டனின் கிரீன்போர்ட் (Greenford) பகுதியில் கடந்த சனிக்கிழமை (யூன் 21) நடைபெற்றது.
அதனை தொடர்ந்து அவரால் எழுதப்பட்ட விடுதலை கானங்கள் இசை நிகழ்ச்சியும் இசைமேதை கலைமாமணி தமிழ்இசை வேங்கை T L மகாராஜன் தலைமையில் இடம்பெற்றது.
மெய்வெளி வெளியீட்டகத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளரும் மெய்வெளி இயக்குனர்களில் ஒருவருமான திருமதி பிரேமலதா சாம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பிரித்தானிய மூத்த பாராளுமன்ற உறுப்பினரான ஜோன் மக்டொனெல் (The Rt Hon. John McDonnell MP) பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார். மாநகர முதல்வர்கள் (Mayors), உள்ளூராட்சித் தலைவர்கள் (Councillors), கல்வியாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்
நிகழ்வின் சிறப்பு அதிதிகளான கிறொளளி மாநகர முதல்வியாகிய சர்மிளா சிவராஜா (Her Worshipful, the Mayor of Crawly Councillor
Sharmila Sivarajah) மற்றும் சவுத்கோல் மேற்கு பிரதி மாநகர முதல்வியாகிய படுமா மொகமெட் (Her Worshipful the Deputy Mayor of Southall West, Councillor Faduma Mohamed), விசேட விருந்தினர்களான உள்ளுராட்சித் தலைவர்கள் தயா இடைக்காடர் (Cllr Thaya Idaikkadar), குகா குமரன் (Cllr Kuha Kumaran), ஜோன் பால் (Cllr Jon Ball), அமர்ஜிற் ஜம்மு (Cllr Amarjit Jammu), சீமா குமார் (Cllr Seema Kumar), டாறிக் முகமட் (Cllr Tariq Mahmood), மொகின்டர் மித்தா (Cllr Mohinder Midha), ஐய்ஷா றாசா (Cllr Aysha Raza), சசி சுரேஷ் (Cllr Sasi Suresh), கிருஷ்ணா சுரேஷ் (Cllr Krishna Suresh), சுரிண்டர் ஹ்ஹூர் ஜச்சல் (Cllr Surinder Kaur Jassal), கிரகம் வில்லியம்சன் (Cllr Graham Williamson), டீ மார்டின் (Cllr Dee Martin), வர்லினி அலேக்சாண்டர் (Cllr Varlene Alexander), சசி மயில்வாகனம் (Cllr Sashi Mylvagan) மற்றும் முரளி குணராஜா (Cllr Murali Gunarajah) ஆகியோரும் கலந்து கொண்டனர்
அறிமுக நிகழ்வாக நூலாசிரியர் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் பற்றிய ஒரு ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது.
தொடர்ந்து விழாவின் பிரதான நிகழ்வான நூல் அறிமுகம் இடம்பெற்றது. மெய்வெளி நிறுவுனர், மூத்த ஊடகவிலாளருமான சாம் பிரதீபன் கவிஞர் காசி ஆனந்தனின் "விலங்கினை உடைத்து" தன்வரலாற்று நூலினை அறிமுகம் செய்து வைத்து சிறப்பு உரை நிகழ்த்தினார்.
அடுத்து சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்பட்டிருந்த தனிநாயகம் தமிழ் பாடசாலை அதிபரும் எழுத்தாளரும் இலக்கிய ஆர்வலருமான திரு துரைசாமி சிவபாலன் அவர்களும், PERL அமைப்பின் இடைக்கால நிறைவேற்றுப் பணிப்பாளரும் லண்டன் சிட்டி பல்கலைக்கழக ஒப்பீட்டு அரசியல் உதவிப் பேராசிரியருமாகிய முனைவர் மதுரா இராசரட்ணம் நூல் பற்றி நயவுரைகளை வழங்கினார் .
பிரதம விருந்தினரான பிரித்தானிய மூத்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மக்டொனெல் முதல் பிரதியை வழங்கி வைக்க, தொழிலதிபரான ஜெராட் நிக்கஸ் பெற்றுக்கொண்டார்.
அடுத்து இந்த விழாவின் கதாநாயகரான மாமனிதர் காசி ஆனந்தனின் ஏற்புரை காணொளி மூலம் வழங்கப்பட்டது.
நூல் அறிமுக விழாவின் இறுதியாக, இந்த “விலங்கை உடைத்து-தன்வரலாறு” நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் நூலாசிரியர் உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தனின் மகள் மருத்துவர் அமுதநிலா காசி ஆனந்தன் நன்றியுரை வழங்கினார்.
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் தன்வரலாறு “விலங்கை உடைத்து” நூல் அறிமுக விழா விடுதலைப்போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்து வாழும் வரலாறாக வாழ்ந்து கொண்டிருப்பவருமானமாமனிதர் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் "விலங்கை உடைத்து" என்னும் தன் வரலாற்று நூல் அறிமுக விழா இலண்டனின் கிரீன்போர்ட் (Greenford) பகுதியில் கடந்த சனிக்கிழமை (யூன் 21) நடைபெற்றது. அதனை தொடர்ந்து அவரால் எழுதப்பட்ட விடுதலை கானங்கள் இசை நிகழ்ச்சியும் இசைமேதை கலைமாமணி தமிழ்இசை வேங்கை T L மகாராஜன் தலைமையில் இடம்பெற்றது. மெய்வெளி வெளியீட்டகத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளரும் மெய்வெளி இயக்குனர்களில் ஒருவருமான திருமதி பிரேமலதா சாம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பிரித்தானிய மூத்த பாராளுமன்ற உறுப்பினரான ஜோன் மக்டொனெல் (The Rt Hon. John McDonnell MP) பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார். மாநகர முதல்வர்கள் (Mayors), உள்ளூராட்சித் தலைவர்கள் (Councillors), கல்வியாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்நிகழ்வின் சிறப்பு அதிதிகளான கிறொளளி மாநகர முதல்வியாகிய சர்மிளா சிவராஜா (Her Worshipful, the Mayor of Crawly Councillor Sharmila Sivarajah) மற்றும் சவுத்கோல் மேற்கு பிரதி மாநகர முதல்வியாகிய படுமா மொகமெட் (Her Worshipful the Deputy Mayor of Southall West, Councillor Faduma Mohamed), விசேட விருந்தினர்களான உள்ளுராட்சித் தலைவர்கள் தயா இடைக்காடர் (Cllr Thaya Idaikkadar), குகா குமரன் (Cllr Kuha Kumaran), ஜோன் பால் (Cllr Jon Ball), அமர்ஜிற் ஜம்மு (Cllr Amarjit Jammu), சீமா குமார் (Cllr Seema Kumar), டாறிக் முகமட் (Cllr Tariq Mahmood), மொகின்டர் மித்தா (Cllr Mohinder Midha), ஐய்ஷா றாசா (Cllr Aysha Raza), சசி சுரேஷ் (Cllr Sasi Suresh), கிருஷ்ணா சுரேஷ் (Cllr Krishna Suresh), சுரிண்டர் ஹ்ஹூர் ஜச்சல் (Cllr Surinder Kaur Jassal), கிரகம் வில்லியம்சன் (Cllr Graham Williamson), டீ மார்டின் (Cllr Dee Martin), வர்லினி அலேக்சாண்டர் (Cllr Varlene Alexander), சசி மயில்வாகனம் (Cllr Sashi Mylvagan) மற்றும் முரளி குணராஜா (Cllr Murali Gunarajah) ஆகியோரும் கலந்து கொண்டனர்அறிமுக நிகழ்வாக நூலாசிரியர் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் பற்றிய ஒரு ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது.தொடர்ந்து விழாவின் பிரதான நிகழ்வான நூல் அறிமுகம் இடம்பெற்றது. மெய்வெளி நிறுவுனர், மூத்த ஊடகவிலாளருமான சாம் பிரதீபன் கவிஞர் காசி ஆனந்தனின் "விலங்கினை உடைத்து" தன்வரலாற்று நூலினை அறிமுகம் செய்து வைத்து சிறப்பு உரை நிகழ்த்தினார். அடுத்து சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்பட்டிருந்த தனிநாயகம் தமிழ் பாடசாலை அதிபரும் எழுத்தாளரும் இலக்கிய ஆர்வலருமான திரு துரைசாமி சிவபாலன் அவர்களும், PERL அமைப்பின் இடைக்கால நிறைவேற்றுப் பணிப்பாளரும் லண்டன் சிட்டி பல்கலைக்கழக ஒப்பீட்டு அரசியல் உதவிப் பேராசிரியருமாகிய முனைவர் மதுரா இராசரட்ணம் நூல் பற்றி நயவுரைகளை வழங்கினார் . பிரதம விருந்தினரான பிரித்தானிய மூத்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மக்டொனெல் முதல் பிரதியை வழங்கி வைக்க, தொழிலதிபரான ஜெராட் நிக்கஸ் பெற்றுக்கொண்டார். அடுத்து இந்த விழாவின் கதாநாயகரான மாமனிதர் காசி ஆனந்தனின் ஏற்புரை காணொளி மூலம் வழங்கப்பட்டது. நூல் அறிமுக விழாவின் இறுதியாக, இந்த “விலங்கை உடைத்து-தன்வரலாறு” நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் நூலாசிரியர் உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தனின் மகள் மருத்துவர் அமுதநிலா காசி ஆனந்தன் நன்றியுரை வழங்கினார்.