தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் எந்தவொரு சந்தர்ப்பதிலும் விலை போகின்ற ஒருவராக இருக்கவில்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பிரச்சார செயற்பாடுகளில் ஓர் அங்கமாக துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் பணிகள் இன்று மட்டக்களப்பு மாநகர சபை பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.
இதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மிகவும் ஒரு சூடு சொரணை உள்ள தலைவர்
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் விலை போகின்ற ஒருவராக இருக்கவில்லை
உண்மை என்ற ஒருவிடயம் இருப்பதாகவும் ஊகம் என்ற ஒருவியடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
யுத்த களத்தில் தனது மூன்று தலைமுறைகளை இழந்து இருக்கின்றார்.
பழ நெடுமாறன் அவர்கள் கூறியிருக்கின்றார் அவருடைய கருத்தை எடுத்தவுடன் நாங்கள் தட்டி விட முடியாது இருந்தாலும் இந்த கருத்தின் பின் அரசியல் இருக்கின்றதோ அல்லது புலனாய்வு விடயங்கள் இருக்கின்றதோ என்று சந்தேகம் இருக்கின்றோம்.
பழைய குருடி கதவை திறவடி என்று கூறுவார்கள் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து தற்போது வரை
இந்த நாட்டில் மிக மோசமான சிங்கள பௌத்த அடிப்படைவாதம் இந்த நாட்டை சீர்குலைத்து இருக்கின்றது.
மரத்தால் விழுந்தவனை மாடு முட்டுவது போல் மக்களிடம் வருமானம் வற்றிப் போய் கிடக்கின்றது வருமானம் இல்லாத நிலையில் வரிகள் அதிகரித்து கொண்டிருக்கின்றது.
தலைவர் பிரபாகரன் எந்தவொரு சந்தர்ப்பதிலும் விலை போகவில்லை - சிறிநேசன் விளக்கம் SamugamMedia தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் எந்தவொரு சந்தர்ப்பதிலும் விலை போகின்ற ஒருவராக இருக்கவில்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.இலங்கை தமிழரசு கட்சியின் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பிரச்சார செயற்பாடுகளில் ஓர் அங்கமாக துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் பணிகள் இன்று மட்டக்களப்பு மாநகர சபை பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.இதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மிகவும் ஒரு சூடு சொரணை உள்ள தலைவர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் விலை போகின்ற ஒருவராக இருக்கவில்லை உண்மை என்ற ஒருவிடயம் இருப்பதாகவும் ஊகம் என்ற ஒருவியடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.யுத்த களத்தில் தனது மூன்று தலைமுறைகளை இழந்து இருக்கின்றார்.பழ நெடுமாறன் அவர்கள் கூறியிருக்கின்றார் அவருடைய கருத்தை எடுத்தவுடன் நாங்கள் தட்டி விட முடியாது இருந்தாலும் இந்த கருத்தின் பின் அரசியல் இருக்கின்றதோ அல்லது புலனாய்வு விடயங்கள் இருக்கின்றதோ என்று சந்தேகம் இருக்கின்றோம்.பழைய குருடி கதவை திறவடி என்று கூறுவார்கள் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து தற்போது வரை இந்த நாட்டில் மிக மோசமான சிங்கள பௌத்த அடிப்படைவாதம் இந்த நாட்டை சீர்குலைத்து இருக்கின்றது.மரத்தால் விழுந்தவனை மாடு முட்டுவது போல் மக்களிடம் வருமானம் வற்றிப் போய் கிடக்கின்றது வருமானம் இல்லாத நிலையில் வரிகள் அதிகரித்து கொண்டிருக்கின்றது.