• Mar 20 2025

உள்ளூராட்சி சபைத் தேர்தல்: அர்ச்சுனா எம்.பி யாழில் கட்டுப்பணம்..!

Sharmi / Mar 18th 2025, 4:57 pm
image

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்றைய தினமும் யாழ் தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தலைமையில் வடக்கு கிழக்கில் சுயேட்சை அணி களமிறக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, யாழ் மாவட்டத்தில் யாழ் மாநகர சபை உள்ளிட்ட ஐந்து சபைகளுக்கு நேற்றையதினம் கட்டுப்பணம் செலுத்தி இருந்த நிலையில் இன்றைய தினம் ஏனைய சபைகளுக்கு கட்டுப் பணத்தை செலுத்தியுள்ளார்.

இதேபோன்று வடக்கு கிழக்கில் உள்ள ஏனைய உள்ளூராட்சி மன்றங்களிலும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தலைமையில் சுயேட்சை குழுவாக போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல்: அர்ச்சுனா எம்.பி யாழில் கட்டுப்பணம். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்றைய தினமும் யாழ் தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தலைமையில் வடக்கு கிழக்கில் சுயேட்சை அணி களமிறக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, யாழ் மாவட்டத்தில் யாழ் மாநகர சபை உள்ளிட்ட ஐந்து சபைகளுக்கு நேற்றையதினம் கட்டுப்பணம் செலுத்தி இருந்த நிலையில் இன்றைய தினம் ஏனைய சபைகளுக்கு கட்டுப் பணத்தை செலுத்தியுள்ளார்.இதேபோன்று வடக்கு கிழக்கில் உள்ள ஏனைய உள்ளூராட்சி மன்றங்களிலும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தலைமையில் சுயேட்சை குழுவாக போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement