• Apr 15 2026

காதல் முரண்பாடு விபரீதமானது; காதலி உயிர்மாய்ப்பு! தலைமறைவான காதலனுக்கு வலைவீச்சு

Chithra / Feb 22nd 2026, 8:13 am
image


அனுராதபுரம்இ நொச்சியாகமை பிரதேசத்தில் காதல் முரண்பாடு காரணமாக 23 வயதுடைய யுவதி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துக்கொண்ட சோகச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.


உயிரிழந்த யுவதிக்கும், அதே பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவருக்கும் இடையே கடந்த 5 வருடங்களாகக் காதல் தொடர்பு இருந்து வந்துள்ளது. 


இவர்களது காதலுக்கு இரு வீட்டார் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், நீண்டகாலமாக இந்த உறவு நீடித்து வந்துள்ளது.


சம்பவம் இடம்பெற்ற தினமான நேற்று, காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மனமுடைந்த யுவதி, தனது வீட்டிலேயே தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார்.


இந்தச் சம்பவத்தையடுத்து, காதலன் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார்.


சம்பவம் தொடர்பாக பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


உயிரிழந்த யுவதியின் பெற்றோரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ள பொலிஸார், தலைமறைவாகியுள்ள காதலனைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காதல் முரண்பாடு விபரீதமானது; காதலி உயிர்மாய்ப்பு தலைமறைவான காதலனுக்கு வலைவீச்சு அனுராதபுரம்இ நொச்சியாகமை பிரதேசத்தில் காதல் முரண்பாடு காரணமாக 23 வயதுடைய யுவதி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துக்கொண்ட சோகச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.உயிரிழந்த யுவதிக்கும், அதே பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவருக்கும் இடையே கடந்த 5 வருடங்களாகக் காதல் தொடர்பு இருந்து வந்துள்ளது. இவர்களது காதலுக்கு இரு வீட்டார் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், நீண்டகாலமாக இந்த உறவு நீடித்து வந்துள்ளது.சம்பவம் இடம்பெற்ற தினமான நேற்று, காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மனமுடைந்த யுவதி, தனது வீட்டிலேயே தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார்.இந்தச் சம்பவத்தையடுத்து, காதலன் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார்.சம்பவம் தொடர்பாக பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.உயிரிழந்த யுவதியின் பெற்றோரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ள பொலிஸார், தலைமறைவாகியுள்ள காதலனைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement