யாழ்ப்பாணத்திற்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதியும் ஹீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனா இன்று(29) மாலை 3.00 மணியளவில் கோண்டாவில் ராஜா பிளாசா வீதிப் பலகையையும் மக்கள் நலன்பேணும் அமைப்பின் கட்டடத்தொகுதியையும் திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் யாழ் மாவட்ட. பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் , ஹீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்சபை உறுப்பினர் பேராசிரியர் சமில லியனகே மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
இக் கட்டட திறப்பு விழாவைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் கல்விச் செயற்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவர்கள் மற்றும் சமூக சேவைத் திட்டங்களுக்கு பண உதவி வழங்கும் அணுசரணையாளர்களும் கௌரவிக்கப்பட்டனர். இந் நிகழ்வில் மாணவர்கள் , பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.