• Oct 19 2024

இன்னொருவருடன் திருமணம் நிச்சயமான காதலியின் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த வாலிபர் அதிரடியாக கைது! samugammedia

Tamil nila / Apr 14th 2023, 3:05 pm
image

Advertisement

விஜின், காதலியுடன் ஜாலியாக சுற்றிய போது எடுத்த படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

கேரள மாநிலம் வெள்ளநாடு, கடுக்கமூடு பகுதியை சேர்ந்தவர் விஜின் (வயது 22). இவருக்கும் மலையின்கீழ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவ ருக்கும் காதல் மலர்ந்தது.

விஜினும் அந்த இளம்பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அப்போது பல இடங்களும் சென்று ஜாலியாக சுற்றி வந்தனர். நாளடைவில் விஜினுடனான காதல், இளம்பெண்ணுக்கு கசந்தது. எனவே அவர் விஜினை சந்திப்பதை தவிர்த்தார்.

இதனால் மனம் உடைந்த விஜின், காதலியை சந்தித்து தொடர்ந்து தன்னை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண், காதலை பிரேக்-அப் செய்வதாக கூறினார்.

விஜினுடனான காதலை பிரேக்-அப் செய்த இளம்பெண்ணுக்கு உடனே இன்னொரு வாலிபருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதை அறிந்த விஜின் உடைந்து போனார். காதலியை சந்தித்து விளக்கம் கேட்க முயன்றார். ஆனால் அவர் விஜினை சந்திப்பதையே தவிர்த்தார். இதையடுத்து விஜின், காதலியுடன் ஜாலியாக சுற்றிய போது எடுத்த படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். மேலும் அதனை காதலிக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கும் அனுப்பி வைத்தார்.

இதுபற்றி தெரியவந்ததும் இளம்பெண், போலீசில் புகார் செய்தார். அதில் விஜின், தனது படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் விஜின் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்னொருவருடன் திருமணம் நிச்சயமான காதலியின் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த வாலிபர் அதிரடியாக கைது samugammedia விஜின், காதலியுடன் ஜாலியாக சுற்றிய போது எடுத்த படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.கேரள மாநிலம் வெள்ளநாடு, கடுக்கமூடு பகுதியை சேர்ந்தவர் விஜின் (வயது 22). இவருக்கும் மலையின்கீழ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவ ருக்கும் காதல் மலர்ந்தது.விஜினும் அந்த இளம்பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அப்போது பல இடங்களும் சென்று ஜாலியாக சுற்றி வந்தனர். நாளடைவில் விஜினுடனான காதல், இளம்பெண்ணுக்கு கசந்தது. எனவே அவர் விஜினை சந்திப்பதை தவிர்த்தார்.இதனால் மனம் உடைந்த விஜின், காதலியை சந்தித்து தொடர்ந்து தன்னை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண், காதலை பிரேக்-அப் செய்வதாக கூறினார்.விஜினுடனான காதலை பிரேக்-அப் செய்த இளம்பெண்ணுக்கு உடனே இன்னொரு வாலிபருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதை அறிந்த விஜின் உடைந்து போனார். காதலியை சந்தித்து விளக்கம் கேட்க முயன்றார். ஆனால் அவர் விஜினை சந்திப்பதையே தவிர்த்தார். இதையடுத்து விஜின், காதலியுடன் ஜாலியாக சுற்றிய போது எடுத்த படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். மேலும் அதனை காதலிக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கும் அனுப்பி வைத்தார்.இதுபற்றி தெரியவந்ததும் இளம்பெண், போலீசில் புகார் செய்தார். அதில் விஜின், தனது படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் விஜின் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement