வெளிநாடுகளில் உள்ள சகோதரர்கள் பணம் அனுப்பவில்லை என்ற விரக்தியில் நபரொருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ள துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
சாவகச்சேரி - நுணாவில் கைதடியைச் சேர்ந்த 50 வயதுடைய பரராஜசிங்கம் பாஸ்கரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபரின் சகோதரர்கள் நால்வர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் தனக்கு பணம் அனுப்பவில்லை என்ற விரக்தியில் இருந்துள்ளார்
குறித்த நபர் கடந்த 18ஆம் திகதி நஞ்சருந்தி சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக நேற்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
வெளிநாட்டு சகோதரர்கள் பணம் அனுப்பாததால் விரக்தியில் உயிர் மாய்த்த நபர் - யாழில் சம்பவம் வெளிநாடுகளில் உள்ள சகோதரர்கள் பணம் அனுப்பவில்லை என்ற விரக்தியில் நபரொருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ள துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது சாவகச்சேரி - நுணாவில் கைதடியைச் சேர்ந்த 50 வயதுடைய பரராஜசிங்கம் பாஸ்கரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த நபரின் சகோதரர்கள் நால்வர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் தனக்கு பணம் அனுப்பவில்லை என்ற விரக்தியில் இருந்துள்ளார் குறித்த நபர் கடந்த 18ஆம் திகதி நஞ்சருந்தி சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக நேற்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.