• Sep 19 2024

நண்பர்களுடன் நீராடச் சென்றவருக்கு ஏற்பட்ட சோகம் - மரத்திலிருந்து குதித்தவர் மரணம்

Chithra / Jun 1st 2024, 5:43 pm
image

Advertisement

 

குருநாகல் - பொல்பித்திகம பகுதியில்  மரமொன்றிலிருந்து வாவிக்குள் குதித்தவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (31) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொல்பித்திகம, கிரிப்பமுனேகம பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் நேற்று பிற்பகல் இரண்டு நண்பர்களுடன் இணைந்து பொல்பித்திகம புதிய வாவிக்கு நீராடச் சென்றுள்ளார்.

இதன்போது இவர் வாவிக்கு அருகிலிருந்த மரமொன்றின் கிளையில் ஏறி நின்று வாவியில் குதித்ததன் பின்னர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரது சடலம் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பொல்பித்திகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நண்பர்களுடன் நீராடச் சென்றவருக்கு ஏற்பட்ட சோகம் - மரத்திலிருந்து குதித்தவர் மரணம்  குருநாகல் - பொல்பித்திகம பகுதியில்  மரமொன்றிலிருந்து வாவிக்குள் குதித்தவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று (31) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பொல்பித்திகம, கிரிப்பமுனேகம பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இவர் நேற்று பிற்பகல் இரண்டு நண்பர்களுடன் இணைந்து பொல்பித்திகம புதிய வாவிக்கு நீராடச் சென்றுள்ளார்.இதன்போது இவர் வாவிக்கு அருகிலிருந்த மரமொன்றின் கிளையில் ஏறி நின்று வாவியில் குதித்ததன் பின்னர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவரது சடலம் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மேலதிக விசாரணைகளை பொல்பித்திகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement