• Sep 17 2024

முல்லைத்தீவில் இடம்பெற்ற மாணிக்கவாசகர் குருபூசை நிகழ்வு...!

Sharmi / Jul 15th 2024, 10:50 am
image

Advertisement

மணிக்கவாசகர் குருபூசை நிகழ்வானது நேற்றையதினம்(14) புதுக்குடியிருப்பில் நடைபெற்றது. 

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஐயப்பன் ஆலயத்தில் மாணிக்கவாசகர் குருபூசை நிகழ்வானது இடம்பெற்றிருந்தது.

ஆலய தலைவர் அமுதலிங்கம் தலைமையில் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில், பிரதம விருந்தினராக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா ரவிகரன், கௌரவ விருந்தினராக கிருபாலிங்கம், மணியம்மா, ஜெயபாலன் ,இலங்கை வங்கி முன்னாள் முகாமையாளர் பால்ராஜா, கமநல அபிவவிருத்தி உத்தியோகத்தர் தயாறூபன் , அரச உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வானது  மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி வரவேற்புரை, தலைமையுரை, அறநெறி மாணவர்களின் நிகழ்வு ,வரவேற்பு நடனம்,பேச்சு , கதை, பிரதம,கௌரவ,சிறப்பு விருந்தினர்கள் உரை, பரிசில்கள் வழங்கிவைப்பு, நன்றியுரையை  தொடர்ந்து அன்னதானத்துடன் குறித்த நிகழ்வு நிறைவு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




முல்லைத்தீவில் இடம்பெற்ற மாணிக்கவாசகர் குருபூசை நிகழ்வு. மணிக்கவாசகர் குருபூசை நிகழ்வானது நேற்றையதினம்(14) புதுக்குடியிருப்பில் நடைபெற்றது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஐயப்பன் ஆலயத்தில் மாணிக்கவாசகர் குருபூசை நிகழ்வானது இடம்பெற்றிருந்தது.ஆலய தலைவர் அமுதலிங்கம் தலைமையில் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில், பிரதம விருந்தினராக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா ரவிகரன், கௌரவ விருந்தினராக கிருபாலிங்கம், மணியம்மா, ஜெயபாலன் ,இலங்கை வங்கி முன்னாள் முகாமையாளர் பால்ராஜா, கமநல அபிவவிருத்தி உத்தியோகத்தர் தயாறூபன் , அரச உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.குறித்த நிகழ்வானது  மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி வரவேற்புரை, தலைமையுரை, அறநெறி மாணவர்களின் நிகழ்வு ,வரவேற்பு நடனம்,பேச்சு , கதை, பிரதம,கௌரவ,சிறப்பு விருந்தினர்கள் உரை, பரிசில்கள் வழங்கிவைப்பு, நன்றியுரையை  தொடர்ந்து அன்னதானத்துடன் குறித்த நிகழ்வு நிறைவு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement