இலங்கையின் 74 வது ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு 3ம்,4ம் இடங்களை பெற்ற
மன்னார் மாவட்ட வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (6) மன்னார்
மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
-இதன் போது 3 ஆம் இடத்தை பெற்ற ஜெஸ்லின் மற்றும் 4 ஆம் இடத்தைப் பெற்ற ஜான்சன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
-மன்னார்
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெலினால் பொன்னாடை போர்த்தி,
நினைவுச் சின்னம் மற்றும் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன் போது மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் மற்றும் மாவட்ட செயலக பணியாளர்களும் கலந்து கொண்டு வீரர்களை வாழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.