• Mar 13 2026

பேருந்து தரிப்பிடத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு! களுவாஞ்சிகுடியில் சம்பவம்

Chithra / Dec 29th 2025, 11:54 am
image

 

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு மகாவித்தியாலயத்திற்கு முன்னால் உள்ள பேருந்து தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  


இன்று திங்கட்கிழமை முற்பகல் இச் சடலம் மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.


இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


மண்முனை தென்எருவில்பற்று பிரதேச சபை சுகாதார தொழிலாளர்கள் அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் இவ்வாறு சடலம் ஒன்று கிடப்பதாக பொலிசாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். 


சடலமாக மீட்கப்பட்டவர் தேற்றாத்தீவு கிராமத்தைச் சேர்ந்த 70 வயதுடைய சுப்பிரமணியம் நேசதுரை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இந்நிலையில நீதிமன்ற உத்தரவைப் பெற்று மேலதிக நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.


பேருந்து தரிப்பிடத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு களுவாஞ்சிகுடியில் சம்பவம்  மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு மகாவித்தியாலயத்திற்கு முன்னால் உள்ள பேருந்து தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  இன்று திங்கட்கிழமை முற்பகல் இச் சடலம் மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மண்முனை தென்எருவில்பற்று பிரதேச சபை சுகாதார தொழிலாளர்கள் அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் இவ்வாறு சடலம் ஒன்று கிடப்பதாக பொலிசாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் தேற்றாத்தீவு கிராமத்தைச் சேர்ந்த 70 வயதுடைய சுப்பிரமணியம் நேசதுரை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இந்நிலையில நீதிமன்ற உத்தரவைப் பெற்று மேலதிக நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement