• Sep 20 2024

ரிஷாத்தின் சகாக்கள் பலர் ரணிலுக்கு ஆதரவு!

Chithra / Sep 10th 2024, 7:43 am
image

Advertisement


ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்குத் தமது பூரண ஆதரவை வழங்குவதாக ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலரும் தெரிவித்தனர் என்று ரணிலின் தேர்தல் பிரசார ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அலிகான் ஷரீப், முசலி பிரதேச சபை முன்னாள் தலைவர் ஏ.ஜீ.எச். சுபிஹான், முசலி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.ரஸ்மின், ஹனீப் மக்பூல், எம்.எச்.எம்.காமில், அஷ்ஷெய்க் அப்துர் ரஹ்மான் மற்றும் முசலி உலமா சபை முன்னாள் தலைவர் எம்.தௌபீக் உள்ளிட்ட கட்சி செயற்பாட்டாளர்கள் பலர் கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நேற்று  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து தமது ஆதரவை வெளியிட்டனர்.

வடக்கிலுள்ள முக்கிய பிரதேச சபைகளில் ஒன்றான முசலி பிரதேச சபையின் ஒரே ஒரு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் தவிர அனைத்து உறுப்பினர்களும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கு முன்வந்துள்ளதோடு, 

நாட்டை நெருக்கடி நிலையிலிருந்து மீட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் எமது கட்சி ஆரம்பம் முதலே இருந்தது எனவும், கட்சித் தலைமையும் அந்த நிலைப்பாட்டையே கொண்டிருந்தது எனவும் கட்சி முக்கியஸ்தர்கள் சுட்டிக்காட்டினர்.

ஆனால், கட்சியிலுள்ள சிலரது அழுத்தம் காரணமாக கட்சியின் தலைவர் வேறு வேட்பாளரை ஆதரிக்க முடிவு செய்தார். இருந்தாலும் எமது கட்சியின் பெரும்பான்மையானவர்களின் ஆதரவு ஜனாதிபதிக்கே வழங்கப்படுகின்றது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

ஏனைய வேட்பாளர்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிலையில் நாட்டை ஏற்று முன்னேற்றக் கூடிய ஒரே தலைமை ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே எனவும், கட்சி அரசியலுக்கு அப்பால் அவரை ஆதரிப்பதே உகந்தது எனவும் தெரிவித்த அவர்கள், கட்சித் தலைமையும் தனது முடிவை மாற்றி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு  ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.


ரிஷாத்தின் சகாக்கள் பலர் ரணிலுக்கு ஆதரவு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்குத் தமது பூரண ஆதரவை வழங்குவதாக ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலரும் தெரிவித்தனர் என்று ரணிலின் தேர்தல் பிரசார ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அலிகான் ஷரீப், முசலி பிரதேச சபை முன்னாள் தலைவர் ஏ.ஜீ.எச். சுபிஹான், முசலி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.ரஸ்மின், ஹனீப் மக்பூல், எம்.எச்.எம்.காமில், அஷ்ஷெய்க் அப்துர் ரஹ்மான் மற்றும் முசலி உலமா சபை முன்னாள் தலைவர் எம்.தௌபீக் உள்ளிட்ட கட்சி செயற்பாட்டாளர்கள் பலர் கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நேற்று  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து தமது ஆதரவை வெளியிட்டனர்.வடக்கிலுள்ள முக்கிய பிரதேச சபைகளில் ஒன்றான முசலி பிரதேச சபையின் ஒரே ஒரு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் தவிர அனைத்து உறுப்பினர்களும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கு முன்வந்துள்ளதோடு, நாட்டை நெருக்கடி நிலையிலிருந்து மீட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் எமது கட்சி ஆரம்பம் முதலே இருந்தது எனவும், கட்சித் தலைமையும் அந்த நிலைப்பாட்டையே கொண்டிருந்தது எனவும் கட்சி முக்கியஸ்தர்கள் சுட்டிக்காட்டினர்.ஆனால், கட்சியிலுள்ள சிலரது அழுத்தம் காரணமாக கட்சியின் தலைவர் வேறு வேட்பாளரை ஆதரிக்க முடிவு செய்தார். இருந்தாலும் எமது கட்சியின் பெரும்பான்மையானவர்களின் ஆதரவு ஜனாதிபதிக்கே வழங்கப்படுகின்றது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.ஏனைய வேட்பாளர்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிலையில் நாட்டை ஏற்று முன்னேற்றக் கூடிய ஒரே தலைமை ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே எனவும், கட்சி அரசியலுக்கு அப்பால் அவரை ஆதரிப்பதே உகந்தது எனவும் தெரிவித்த அவர்கள், கட்சித் தலைமையும் தனது முடிவை மாற்றி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு  ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement