• May 18 2024

மன்னார் பிரீமியர் லீக் சுற்றுப் போட்டி முடிவில் மைதானத்தில் பாரிய மோதல்-இருவர் வைத்தியசாலையில் அனுமதி-மன்னார் பொலிஸாரின் செயல்பாடு குறித்து மக்கள் விசனம்...!samugammedia

Anaath / Dec 4th 2023, 11:03 am
image

Advertisement

மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் எற்பாடு செய்த மன்னார் பிரீமியர் லீக்   சுற்றுப் போட்டியின் இறுதிச் சுற்று நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (3) மாலை -மன்னார் பள்ளிமுனை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற போது போட்டியின் முடிவில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த 2 பேர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,

மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் ஏற்பாடு செய்த மன்னார் பிரீமியர் லீக்  சுற்றுப் போட்டியின் இறுதிச் சுற்று நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (3) மாலை -மன்னார் பள்ளிமுனை விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த போட்டியானது ஏ.கே.ஆர்.FC அணிக்கும் அயிலன் FC அணிக்கும் இடையில் இடம்பெற்றது. இதன் போது அயிலன் FC அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் போட்டி முடிவடைந்த நிலையில் சில நபர்களுக்கிடையில் மைதானத்தில் மோதல் ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்து பாரிய மோதலாக இடம்பெற்றது.நீண்ட நேரத்தின் பின்னர் மோதல் தனித்த நிலையில் பரிசளிப்பு நிகழ்வு இடம் பெற்று போட்டியாளர்கள் மைதானத்தில் இருந்து வெளியேறினர்.

எனினும் போட்டியை ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் பள்ளி முனை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என பலர் மைதானத்தைச் சூழ்ந்த பகுதிகளில் நின்ற போது மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் வந்த பொலிஸார் வீதியில் சென்றவர்கள் மற்றும் மைதான பகுதிகளில் நின்றவர்களை தடியினால் தாக்கியதாக குற்றம் சுமத்தியதோடு,பொலிஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

பிரச்சனை முடிந்து நீண்ட நேரத்தின் பின்னர் பொலிஸார் வந்து மக்கள் மீது தாக்கியதை மக்கள் உண்மையாக   கண்டித்துள்ளனர்.

மேலும் குறித்த மோதலின் போது காயமடைந்த 2 பேர் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

மன்னார் பிரீமியர் லீக் சுற்றுப் போட்டி முடிவில் மைதானத்தில் பாரிய மோதல்-இருவர் வைத்தியசாலையில் அனுமதி-மன்னார் பொலிஸாரின் செயல்பாடு குறித்து மக்கள் விசனம்.samugammedia மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் எற்பாடு செய்த மன்னார் பிரீமியர் லீக்   சுற்றுப் போட்டியின் இறுதிச் சுற்று நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (3) மாலை -மன்னார் பள்ளிமுனை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற போது போட்டியின் முடிவில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த 2 பேர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் ஏற்பாடு செய்த மன்னார் பிரீமியர் லீக்  சுற்றுப் போட்டியின் இறுதிச் சுற்று நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (3) மாலை -மன்னார் பள்ளிமுனை விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது.குறித்த போட்டியானது ஏ.கே.ஆர்.FC அணிக்கும் அயிலன் FC அணிக்கும் இடையில் இடம்பெற்றது. இதன் போது அயிலன் FC அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.இந்த நிலையில் போட்டி முடிவடைந்த நிலையில் சில நபர்களுக்கிடையில் மைதானத்தில் மோதல் ஏற்பட்டது.அதனைத்தொடர்ந்து பாரிய மோதலாக இடம்பெற்றது.நீண்ட நேரத்தின் பின்னர் மோதல் தனித்த நிலையில் பரிசளிப்பு நிகழ்வு இடம் பெற்று போட்டியாளர்கள் மைதானத்தில் இருந்து வெளியேறினர்.எனினும் போட்டியை ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் பள்ளி முனை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என பலர் மைதானத்தைச் சூழ்ந்த பகுதிகளில் நின்ற போது மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் வந்த பொலிஸார் வீதியில் சென்றவர்கள் மற்றும் மைதான பகுதிகளில் நின்றவர்களை தடியினால் தாக்கியதாக குற்றம் சுமத்தியதோடு,பொலிஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.பிரச்சனை முடிந்து நீண்ட நேரத்தின் பின்னர் பொலிஸார் வந்து மக்கள் மீது தாக்கியதை மக்கள் உண்மையாக   கண்டித்துள்ளனர்.மேலும் குறித்த மோதலின் போது காயமடைந்த 2 பேர் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement