• Sep 20 2024

அமைச்சர் பந்துலவின் கடன் அட்டையை பயன்படுத்தி மோசடி - விசாரணை ஆரம்பம்

Chithra / Jul 31st 2024, 11:06 am
image

Advertisement

 

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவின் கடன் அட்டையை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்த நபர்கள் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் அமைச்சரின் கடன் அட்டையை பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தனவினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு நீதிமன்றம், குற்ற விசாரணைப் பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளது.

அமைச்சருக்கு சொந்தமான கடன் அட்டையை பயன்படுத்தி மோசடியான முறையில் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐந்து இலட்சம் ரூபா கடன் உச்ச வரம்பினைக் கொண்ட இலங்கை வங்கிக் கடன் அட்டை ஒன்றைப் பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அமைச்சர் பந்துலவின் கடன் அட்டையை பயன்படுத்தி மோசடி - விசாரணை ஆரம்பம்  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவின் கடன் அட்டையை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்த நபர்கள் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.சட்டவிரோதமான முறையில் அமைச்சரின் கடன் அட்டையை பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தனவினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு நீதிமன்றம், குற்ற விசாரணைப் பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளது.அமைச்சருக்கு சொந்தமான கடன் அட்டையை பயன்படுத்தி மோசடியான முறையில் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஐந்து இலட்சம் ரூபா கடன் உச்ச வரம்பினைக் கொண்ட இலங்கை வங்கிக் கடன் அட்டை ஒன்றைப் பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement