பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் வன்னிப் படைத் தலைமையகத்திற்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
வவுனியாவில்
அமைந்துள்ள வன்னிப் படைத் தலைமையகத்திற்கு நேற்று (25) திடீர் விஜயம்
மேற்கொண்ட அவர் வன்னிப் படைக் கட்டளைத் தளபதி உள்ளிட்ட இராணுவ உயர்
அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டுள்ளதுடன், படைத்
தலைமையகத்தையும் பார்வையிட்டார்.
அதனைத்
தொடர்ந்து, வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினருமாக கு.திலீபன் அவர்களின் அலுவலகத்திற்கு சென்று
அவருடனும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.