காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையிலான ஆளுந் தரப்பினர் குழுவொன்று இன்றையதினம் விஜயம் செய்துள்ளனர்.
பல ஆண்டுகளாக மூடப்பட்டு இயங்காத நிலையில் இருக்கும் குறித்த சீமெந்து தொழிற்சாலையின் நிலைமை தொடர்பில் ஆராயும் பொருட்டு கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் விடுத்த அழைப்பின் பேரிலேயே அமைச்சர் உள்ளடங்கலான குழுவினர் விஜயம் செய்துள்ளனர்.
கடந்த 1950 ஆம் ஆண்டு வடக்கின் சூரிய உதயமென நிறுவப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றியதுடன் வருடமொன்றிற்கு சுமார் 760,000 மெற்றிக்தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது.
இந்நிலையில் நாட்டில் நிலவிய போர்ச் சூழலின் காரணமாக தொழிற்சாலையின் செயற்பாடுகள் 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன.
இந்நிலையில் தற்போது இயங்காநிலையில் காணப்படும் சீமெந்து தொழிற்சாலையை, சீமெந்து உற்பத்திக்கென ஆரம்பிப்பதற்கு பல சவால்கள் உள்ளதுடன் அவை தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டன.
அதேவேளை, சீமெந்து தொழிற்சாலையாக அல்லாமல், வடக்குக்கு பொருளாதார பலன் தரக்கூடிய வேறு திட்டங்களை இங்கு செயல்படுத்தலாமா என்பது பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன் , எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, யாழ். மாவட்ட பதில் செயலாளர் பிரதீபன், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு விஜயம். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையிலான ஆளுந் தரப்பினர் குழுவொன்று இன்றையதினம் விஜயம் செய்துள்ளனர்.பல ஆண்டுகளாக மூடப்பட்டு இயங்காத நிலையில் இருக்கும் குறித்த சீமெந்து தொழிற்சாலையின் நிலைமை தொடர்பில் ஆராயும் பொருட்டு கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் விடுத்த அழைப்பின் பேரிலேயே அமைச்சர் உள்ளடங்கலான குழுவினர் விஜயம் செய்துள்ளனர்.கடந்த 1950 ஆம் ஆண்டு வடக்கின் சூரிய உதயமென நிறுவப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றியதுடன் வருடமொன்றிற்கு சுமார் 760,000 மெற்றிக்தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது.இந்நிலையில் நாட்டில் நிலவிய போர்ச் சூழலின் காரணமாக தொழிற்சாலையின் செயற்பாடுகள் 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன.இந்நிலையில் தற்போது இயங்காநிலையில் காணப்படும் சீமெந்து தொழிற்சாலையை, சீமெந்து உற்பத்திக்கென ஆரம்பிப்பதற்கு பல சவால்கள் உள்ளதுடன் அவை தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டன.அதேவேளை, சீமெந்து தொழிற்சாலையாக அல்லாமல், வடக்குக்கு பொருளாதார பலன் தரக்கூடிய வேறு திட்டங்களை இங்கு செயல்படுத்தலாமா என்பது பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.குறித்த கலந்துரையாடலில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன் , எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, யாழ். மாவட்ட பதில் செயலாளர் பிரதீபன், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.