• May 20 2024

வடக்கு, கிழக்கு இனவாத முரண்பாடுகளுக்கு அமைச்சர் விதுரவே கதாநாயகன்..! - கடுமையாக சாடிய சாணக்கியன்

Chithra / Dec 7th 2023, 11:38 am
image

Advertisement

புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் கடும் இனவாதி. தமிழர் மரபுரிமைகளை அழிப்பதையே அவர் நோக்கமாக கொண்டுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கில் இனவாத முரண்பாடுகளுக்கு இவரே கதாநாயகன் என தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசாணிக்கம் தெரிவித்தார்.

தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்தை பதவி விலக்கியதற்கு பதிலாக ஜனாதிபதி இவரை பதவி விலக்கியிருக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதிக்கு தைரியம் இல்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்துக் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கில் இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட இவர் புத்தசாசன அமைச்சராக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.

இவர் கடும் இனவாதி. மலைகளை கண்டால் அவரால் இருக்க முடியாது. அங்கு ஓடிச் செல்வார். வெடுக்குநாறி மலை குருந்தூர் மலைக்கு ஓடி வந்தார். இனவாத முரண்பாடுகளை தோற்றுவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட குசலான மலைக்கும் வந்தார். ஆனால் நாங்கள் அவரை அங்கு செல்லவிடவில்லை. ஒரு கிலோமீற்றர் தூரம் நடக்க வைத்து வழியனுப்பி வைத்தோம்.

இனவாத செயற்பாடுகளுக்காகவே புத்தசாசனம் அமைச்சும், தொல்பொருள் திணைக்களமும் பயன்படுத்தப்படுகிறது.

இனவாதியான புத்தசாசன அமைச்சர் நீதிமன்ற கட்டளைக்கு புறம்பாக இராணுவத்துடன் நெடுக்குநாறிக்கு வருகை தந்தார்.

ஆகவே இவருக்கு எதிராக எதிர்காலத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்போம். இந்த கடும் இனவாதி அமைச்சரினால் தான் நீதிபதி ஒருவர் நாட்டை விட்டு வெளியேறினார். எதிர்காலத்தில் நிச்சயம் இதற்கு பதிலளிக்க வேண்டும். என்றார்.

வடக்கு, கிழக்கு இனவாத முரண்பாடுகளுக்கு அமைச்சர் விதுரவே கதாநாயகன். - கடுமையாக சாடிய சாணக்கியன் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் கடும் இனவாதி. தமிழர் மரபுரிமைகளை அழிப்பதையே அவர் நோக்கமாக கொண்டுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கில் இனவாத முரண்பாடுகளுக்கு இவரே கதாநாயகன் என தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசாணிக்கம் தெரிவித்தார். தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்தை பதவி விலக்கியதற்கு பதிலாக ஜனாதிபதி இவரை பதவி விலக்கியிருக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதிக்கு தைரியம் இல்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்துக் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கில் இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட இவர் புத்தசாசன அமைச்சராக பதவியுயர்த்தப்பட்டுள்ளார். இவர் கடும் இனவாதி. மலைகளை கண்டால் அவரால் இருக்க முடியாது. அங்கு ஓடிச் செல்வார். வெடுக்குநாறி மலை குருந்தூர் மலைக்கு ஓடி வந்தார். இனவாத முரண்பாடுகளை தோற்றுவித்தார். மட்டக்களப்பு மாவட்ட குசலான மலைக்கும் வந்தார். ஆனால் நாங்கள் அவரை அங்கு செல்லவிடவில்லை. ஒரு கிலோமீற்றர் தூரம் நடக்க வைத்து வழியனுப்பி வைத்தோம். இனவாத செயற்பாடுகளுக்காகவே புத்தசாசனம் அமைச்சும், தொல்பொருள் திணைக்களமும் பயன்படுத்தப்படுகிறது. இனவாதியான புத்தசாசன அமைச்சர் நீதிமன்ற கட்டளைக்கு புறம்பாக இராணுவத்துடன் நெடுக்குநாறிக்கு வருகை தந்தார். ஆகவே இவருக்கு எதிராக எதிர்காலத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்போம். இந்த கடும் இனவாதி அமைச்சரினால் தான் நீதிபதி ஒருவர் நாட்டை விட்டு வெளியேறினார். எதிர்காலத்தில் நிச்சயம் இதற்கு பதிலளிக்க வேண்டும். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement