• Oct 19 2024

காணாமல்போன காத்தான்குடி பாடசாலை மாணவி யாழ் காதலனுடன் மீட்பு! samugammedia

Tamil nila / Apr 12th 2023, 7:37 pm
image

Advertisement

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய காத்தான்குடி பிரதேசத்தில் காணமல்போன 10 ஆம் ஆண்டு பாடசாலை மாணவியை  , யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த தனது காதலனுடன் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள தோட்டம் ஒன்றில் வைத்து பொலிஸார் மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (11) மாலை அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.றகீம் தெரிவித்தார்.

குறித்த மாணவி தனது காதலன் சகிதம் இருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதுடன் மாணவி தற்போது மேலதிக வைத்திய பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைதான காதலன் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த காதலன் காத்தான்குடியில் கைத்தொழில் நிலையமொன்றினை நடாத்திவருகின்றார்.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி பிரதேசத்தில் 10 ஆம் ஆண்டு கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவி வீட்டில் படித்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போயிருந்தார்.

அதேவேளை மாணவி காணாமல்போனமை  தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் நேற்று முன்தினம் (10) முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காணாமல்போன காத்தான்குடி பாடசாலை மாணவி யாழ் காதலனுடன் மீட்பு samugammedia காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய காத்தான்குடி பிரதேசத்தில் காணமல்போன 10 ஆம் ஆண்டு பாடசாலை மாணவியை  , யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த தனது காதலனுடன் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள தோட்டம் ஒன்றில் வைத்து பொலிஸார் மீட்கப்பட்டுள்ளார்.நேற்று (11) மாலை அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.றகீம் தெரிவித்தார்.குறித்த மாணவி தனது காதலன் சகிதம் இருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதுடன் மாணவி தற்போது மேலதிக வைத்திய பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கைதான காதலன் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த காதலன் காத்தான்குடியில் கைத்தொழில் நிலையமொன்றினை நடாத்திவருகின்றார்.மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி பிரதேசத்தில் 10 ஆம் ஆண்டு கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவி வீட்டில் படித்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போயிருந்தார்.அதேவேளை மாணவி காணாமல்போனமை  தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் நேற்று முன்தினம் (10) முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement