வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்க வாய்ப்புள்ளதால், விவசாயிகள் அறுவடை மற்றும் அறுவடைக்கு பிந்திய செயற்பாடுகளை (உலர விடுதல்) மழையிலிருந்து பாதுகாப்பதற்கான உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மேற்கொள்வது சிறந்தது எனவும் தெரிவித்தார்.