• May 19 2024

கொழும்பில் தொடரும் பயங்கரம்..! இருவர் சுட்டுக்கொலை

Chithra / Feb 21st 2024, 9:27 am
image

Advertisement

 

கொழும்பின் இருவேறு பகுதிகளில் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ராகம எப்பிட்டிவல பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் துப்பாக்கிச சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது 39 வயதான நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை மஹாபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலப்பிட்டிவல சந்திக்கு அருகில்  காலை 7.15 மணியளிவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள்  நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் ஹெட்டியாராச்சிகே டொன் சுஜித் எனவும் அவர் வெல்லே சாரங்க என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் உறவினர் எனவும் பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து  தெரியவந்துள்ளது.

இலங்கையில் நாளுக்கு நாள் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

கொழும்பில் தொடரும் பயங்கரம். இருவர் சுட்டுக்கொலை  கொழும்பின் இருவேறு பகுதிகளில் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ராகம எப்பிட்டிவல பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் துப்பாக்கிச சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இதன்போது 39 வயதான நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதேவேளை மஹாபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலப்பிட்டிவல சந்திக்கு அருகில்  காலை 7.15 மணியளிவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள்  நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் ஹெட்டியாராச்சிகே டொன் சுஜித் எனவும் அவர் வெல்லே சாரங்க என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் உறவினர் எனவும் பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து  தெரியவந்துள்ளது.இலங்கையில் நாளுக்கு நாள் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement