• Sep 23 2024

தாய் பேசவில்லை...! யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு..!samugammedia

Sharmi / Aug 16th 2023, 9:04 pm
image

Advertisement

தாய் பேசவில்லை என இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து எலிப்பாசனம் அருந்தி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபருக்கும் அவரது தாயாருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தாயார் அவருடன் சிலநாட்கள் பேசவில்லை. இதனால் மனமுடைந்த நபர் கடந்த 14ஆம் திகதி எலிப்பாசனம் அருந்தியுள்ளார்.

இந்நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்றையதினம் (15) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தங்கராசா சதீஷ் (வயது 41) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்த நிலையில் இவருக்கு 8மாதங்கள் நிரம்பிய குழந்தை ஒன்றும் உள்ளது.

இவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

தாய் பேசவில்லை. யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு.samugammedia தாய் பேசவில்லை என இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து எலிப்பாசனம் அருந்தி உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த நபருக்கும் அவரது தாயாருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தாயார் அவருடன் சிலநாட்கள் பேசவில்லை. இதனால் மனமுடைந்த நபர் கடந்த 14ஆம் திகதி எலிப்பாசனம் அருந்தியுள்ளார்.இந்நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்றையதினம் (15) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.யாழ்ப்பாணத்தை சேர்ந்த தங்கராசா சதீஷ் (வயது 41) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்த நிலையில் இவருக்கு 8மாதங்கள் நிரம்பிய குழந்தை ஒன்றும் உள்ளது.இவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement