• Sep 21 2024

15 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை- மருமகளை விஷம் வைத்து கொன்ற மாமியார்! samugammedia

Tamil nila / May 9th 2023, 10:30 pm
image

Advertisement

 திருமணமாகி 15 வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்காததால், 33 வயது பெண்ணுக்கு அவரது மாமியார் விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. சாலி பேகம் என்ற பெண்ணின் மாமியார் குழந்தை இல்லாததைக் கண்டித்ததாக கூறப்படுகிறது.

குழந்தை பிறக்காததற்காக அவளிடம் கணவன் அடிக்கடி தகராறு செய்தான் என்று கூறப்படுகிறது. கடுமையான வாக்குவாதத்திற்குப் பிறகு, பேகம் தனது சகோதரனை உதவிக்கு அழைத்து மாமியார் தனக்கு விசம் கொடுத்துவிட்டதாக கூறியுள்ளார்.

சகோதரியின் தகவலால் அதிர்ச்சி அடைந்த சகோதரன் தங்கையின் வீட்டிற்கு விரைந்து சென்றபோது அவர் ஆபத்தான நிலையில் இருப்பதைக் கண்டார். பிறகு சிராத்துவில் உள்ள ஒரு சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர் என்று கூறப்படுகிறது. முகமதுவின் புகாரின் அடிப்படையில், கட தாம் காவல் நிலையத்தில், பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.       


15 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை- மருமகளை விஷம் வைத்து கொன்ற மாமியார் samugammedia  திருமணமாகி 15 வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்காததால், 33 வயது பெண்ணுக்கு அவரது மாமியார் விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.உத்தரபிரதேச மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. சாலி பேகம் என்ற பெண்ணின் மாமியார் குழந்தை இல்லாததைக் கண்டித்ததாக கூறப்படுகிறது.குழந்தை பிறக்காததற்காக அவளிடம் கணவன் அடிக்கடி தகராறு செய்தான் என்று கூறப்படுகிறது. கடுமையான வாக்குவாதத்திற்குப் பிறகு, பேகம் தனது சகோதரனை உதவிக்கு அழைத்து மாமியார் தனக்கு விசம் கொடுத்துவிட்டதாக கூறியுள்ளார்.சகோதரியின் தகவலால் அதிர்ச்சி அடைந்த சகோதரன் தங்கையின் வீட்டிற்கு விரைந்து சென்றபோது அவர் ஆபத்தான நிலையில் இருப்பதைக் கண்டார். பிறகு சிராத்துவில் உள்ள ஒரு சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றார்.அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர் என்று கூறப்படுகிறது. முகமதுவின் புகாரின் அடிப்படையில், கட தாம் காவல் நிலையத்தில், பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.       

Advertisement

Advertisement

Advertisement