• Sep 19 2024

வாள்வெட்டுத் தாக்குதலில் இரு பிள்ளைகளின் தாய் பலி! - தனிப்பட்ட தகராறால் இலங்கையில் பயங்கரம்

Chithra / Jun 3rd 2024, 8:21 am
image

Advertisement

 

கண்டி - மஹியாவ பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர்  ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் கடந்த சனிக்கிழமை (1) இரவு இடம்பெற்றுள்ளது. 

கண்டி மஹியாவ  பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய வேளாங்கனி எஷிராணி என்ற தாயே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இக்கொலையுடன் தொடர்புடைய மஹியாவ எம். டி பிரிவில் வசிக்கும் 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக குறித்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் விசாணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரும் சந்தேக நபரும் அயலவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாள்வெட்டுத் தாக்குதலில் இரு பிள்ளைகளின் தாய் பலி - தனிப்பட்ட தகராறால் இலங்கையில் பயங்கரம்  கண்டி - மஹியாவ பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர்  ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் கடந்த சனிக்கிழமை (1) இரவு இடம்பெற்றுள்ளது. கண்டி மஹியாவ  பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய வேளாங்கனி எஷிராணி என்ற தாயே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இக்கொலையுடன் தொடர்புடைய மஹியாவ எம். டி பிரிவில் வசிக்கும் 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.தனிப்பட்ட தகராறு காரணமாக குறித்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் விசாணையில் தெரியவந்துள்ளது.உயிரிழந்தவரும் சந்தேக நபரும் அயலவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.இச் சம்பவம் தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement