• Sep 19 2024

யாழில் மோட்டார் சைக்கிளும் காரும் மோதி கோர விபத்து; நால்வர் காயம்! இருவர் ஸ்தலத்தில் பலி samugammedia

Chithra / May 1st 2023, 6:06 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டிப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள்  உயிரிழந்துள்ளனர்.

ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றொரு பெண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.


மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காரில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்கள் இருவரே மோட்டார் சைக்கிளில் பயணித்தனர் எனவும் அவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் குறிப்பிட்டடனர்.

மானிப்பாயைச் சேர்ந்த நால்வர் காரில் பயணித்தனர். அவர்கள் படுகாயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


யாழில் மோட்டார் சைக்கிளும் காரும் மோதி கோர விபத்து; நால்வர் காயம் இருவர் ஸ்தலத்தில் பலி samugammedia யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டிப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள்  உயிரிழந்துள்ளனர்.ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றொரு பெண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.காரில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக பொலிஸார் கூறினர்.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்கள் இருவரே மோட்டார் சைக்கிளில் பயணித்தனர் எனவும் அவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் குறிப்பிட்டடனர்.மானிப்பாயைச் சேர்ந்த நால்வர் காரில் பயணித்தனர். அவர்கள் படுகாயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement