திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் கெப் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் கண்டி பிரதான வீதி 98 ஆம் கட்டை சந்தியை அண்மித்த பகுதியில் இன்று (21) மாலை இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் தெரியவருகையில்,
மூதூர் வலயக் கல்வி அலுவலகத்துக்கு சொந்தமான கெப் ரக வாகனம் ஒன்று குறித்த வீதியின் அருகே வயல் வெளி ஊடாக திருப்ப முற்பட்ட வேளை அவ்வழியே பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் 48,50 வயது மதிக்கத்தக்கவர்கள் என்றும் ஒருவர் 5ம் கட்டை பகுதியை சேர்ந்தவர் எனவும் மற்றவர் கல்மெடியாவ வடக்கு பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்டதுடன் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கெப் ரக வாகனத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் - சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழப்பு திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் கெப் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் கண்டி பிரதான வீதி 98 ஆம் கட்டை சந்தியை அண்மித்த பகுதியில் இன்று (21) மாலை இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் தெரியவருகையில், மூதூர் வலயக் கல்வி அலுவலகத்துக்கு சொந்தமான கெப் ரக வாகனம் ஒன்று குறித்த வீதியின் அருகே வயல் வெளி ஊடாக திருப்ப முற்பட்ட வேளை அவ்வழியே பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரும் 48,50 வயது மதிக்கத்தக்கவர்கள் என்றும் ஒருவர் 5ம் கட்டை பகுதியை சேர்ந்தவர் எனவும் மற்றவர் கல்மெடியாவ வடக்கு பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்டதுடன் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.