யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் வழங்கப்பட்ட சத்துமா பொதியினுள் புழுக்கள் காணப்பட்ட நிலையில் சத்துமா நிறுவனத்துக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உரும்பிராய் பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றினால் நேற்று (20) சத்துமா வழங்கப்பட்டது.
அந்த சத்துமாவினை பரிசோதித்த ஒருவர் அது தரமற்ற சத்துமா என சந்தேகமடைந்த நிலையில் அதனை அரிதட்டின் மூலம் அரித்தபோது அதில் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் சிறார்களிடமிருந்து அனைத்து சத்துமா பைகளையும் பெற்றுக்கொண்ட குறித்த நபர், அதனை ஊரில் உள்ள பொது மண்டபம் ஒன்றில் வைத்தார். அதனையடுத்து அந்த நபருடன் தொண்டு நிறுவனத்தினர் சிறிது நேரம் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் சத்துமா பொதிகளை எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனையடுத்து இது குறித்து பொது சுகாதார பரிசோதகர் மற்றும் கிராம சேவகரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புழுக்கள் காணப்பட்ட நிலையில் சத்துமா - நிறுவனத்துக்கு எதிராக முறைப்பாடு யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் வழங்கப்பட்ட சத்துமா பொதியினுள் புழுக்கள் காணப்பட்ட நிலையில் சத்துமா நிறுவனத்துக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. உரும்பிராய் பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றினால் நேற்று (20) சத்துமா வழங்கப்பட்டது. அந்த சத்துமாவினை பரிசோதித்த ஒருவர் அது தரமற்ற சத்துமா என சந்தேகமடைந்த நிலையில் அதனை அரிதட்டின் மூலம் அரித்தபோது அதில் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் சிறார்களிடமிருந்து அனைத்து சத்துமா பைகளையும் பெற்றுக்கொண்ட குறித்த நபர், அதனை ஊரில் உள்ள பொது மண்டபம் ஒன்றில் வைத்தார். அதனையடுத்து அந்த நபருடன் தொண்டு நிறுவனத்தினர் சிறிது நேரம் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் சத்துமா பொதிகளை எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.அதனையடுத்து இது குறித்து பொது சுகாதார பரிசோதகர் மற்றும் கிராம சேவகரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.