• Sep 29 2024

பாணாந்துறை கடலில் மர்மம்...! குளித்தவர்களுக்கு அதிர்ச்சி...! 10 பேர் வைத்தியசாலையில் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை...!

Sharmi / Jun 22nd 2024, 12:39 pm
image

Advertisement

கடலில் நீராடிக் கொண்டிருந்த 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் பாணந்துறை கடலில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பாணந்துறை கடலில் நீராடிக் கொண்டிருந்த போது ஜெல்லிமீன் உடலில் பட்டதால் ஏற்பட்ட தோல் ஒவ்வாமை காரணமாக 10 பேர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜெல்லிமீன் அவர்களது உடலில் பட்ட பகுதிகளில் சிவத்தல், அரிப்பு மற்றும் வலி போன்ற அறிகுறிகள் தோன்றியுள்ளன.

இதனையடுத்தே அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்நிலையில் பாணந்துறை கடலில் நீராட செல்பவர்கள் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாணாந்துறை கடலில் மர்மம். குளித்தவர்களுக்கு அதிர்ச்சி. 10 பேர் வைத்தியசாலையில் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை. கடலில் நீராடிக் கொண்டிருந்த 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் பாணந்துறை கடலில் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பாணந்துறை கடலில் நீராடிக் கொண்டிருந்த போது ஜெல்லிமீன் உடலில் பட்டதால் ஏற்பட்ட தோல் ஒவ்வாமை காரணமாக 10 பேர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஜெல்லிமீன் அவர்களது உடலில் பட்ட பகுதிகளில் சிவத்தல், அரிப்பு மற்றும் வலி போன்ற அறிகுறிகள் தோன்றியுள்ளன.இதனையடுத்தே அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இந்நிலையில் பாணந்துறை கடலில் நீராட செல்பவர்கள் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement