• May 19 2024

ரணில் விக்ரமசிங்கவுடன் கைகோர்க்கும் தேசிய மக்கள் சக்தி...! - வஜிர வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Chithra / Feb 9th 2024, 10:26 am
image

Advertisement

 

 

தேசிய மக்கள் சக்தியின் இந்திய விஜயம் வரவேற்கத்தக்கது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அவரது கட்சி, தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் என தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி உலக தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவது நல்ல விடயமாகும்.

நாட்டின் கொள்கைகளை உருவாக்குவதற்கு, தேசிய மக்கள் சக்தி தமது பங்களிப்பை வழங்கும்.

இது புதிய விடயம் ஒன்றல்ல. கடந்த காலத்திலும் தேசிய மக்கள் சக்தி மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ஸ ஆகியோரின் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளது.

2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஜே.வி.பி ஆதரவு வழங்கியுள்ளது.

அந்த வகையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கும் ஜே.வி.பியின் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி ஆதரவு வழங்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுடன் கைகோர்க்கும் தேசிய மக்கள் சக்தி. - வஜிர வெளியிட்ட அதிரடி அறிவிப்பு   தேசிய மக்கள் சக்தியின் இந்திய விஜயம் வரவேற்கத்தக்கது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.அவரது கட்சி, தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் என தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தேசிய மக்கள் சக்தி உலக தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவது நல்ல விடயமாகும்.நாட்டின் கொள்கைகளை உருவாக்குவதற்கு, தேசிய மக்கள் சக்தி தமது பங்களிப்பை வழங்கும்.இது புதிய விடயம் ஒன்றல்ல. கடந்த காலத்திலும் தேசிய மக்கள் சக்தி மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ஸ ஆகியோரின் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளது.2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஜே.வி.பி ஆதரவு வழங்கியுள்ளது.அந்த வகையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கும் ஜே.வி.பியின் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி ஆதரவு வழங்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement