• Jun 23 2025

யாழில் இயற்கை சீற்றம்! 45 குடும்பங்கள் பாதிப்பு!

Thansita / Jun 23rd 2025, 7:17 pm
image

யாழில் நேற்றையதினம் வீசிய மழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் 45 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 2 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 

வேலணை பிரதேச செயலர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகளும், ஒரு சிறு மற்றும் மத்திய வர்த்தக முயற்சியும், 7 அடிப்படை கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன.

ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9 வீடுகளும் ஒரு அடிப்படை கட்டமைப்பும் சேதமடைந்துள்ளன.

காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 18பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.


சங்கானை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் இரண்டு சிறு மற்றும் மத்திய முயற்சிகளும் ஒரு அடிப்படை கட்டமைப்பும் சேதமடைந்துள்ளன.

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 48பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 12 வீடுகளும் 2 அடிப்படை கட்டமைப்புகள் உம் சேதமடைந்துள்ளன.

நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 10பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகளும் அடிப்படை கட்டமைப்பு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

மேலும், தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார் 


யாழில் இயற்கை சீற்றம் 45 குடும்பங்கள் பாதிப்பு யாழில் நேற்றையதினம் வீசிய மழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் 45 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.அந்தவகையில், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 2 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. வேலணை பிரதேச செயலர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகளும், ஒரு சிறு மற்றும் மத்திய வர்த்தக முயற்சியும், 7 அடிப்படை கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன.ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9 வீடுகளும் ஒரு அடிப்படை கட்டமைப்பும் சேதமடைந்துள்ளன.காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 18பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.சங்கானை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் இரண்டு சிறு மற்றும் மத்திய முயற்சிகளும் ஒரு அடிப்படை கட்டமைப்பும் சேதமடைந்துள்ளன.யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 48பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 12 வீடுகளும் 2 அடிப்படை கட்டமைப்புகள் உம் சேதமடைந்துள்ளன.நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 10பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகளும் அடிப்படை கட்டமைப்பு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.மேலும், தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார் 

Advertisement

Advertisement

Advertisement