ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க், இன்று (ஜூன் 23) இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இது 2016ம் ஆண்டுக்குப் பின்னர், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் மேற்கொள்ளும் முதல் இலங்கைப் பயணமாகும்.
ஜூன் 26ம் திகதி வரை இடம்பெறும் இந்த விஜயத்தின் போது,
அவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சர்கள், மக்களவை உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் இராஜதந்திரர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்திக்கவுள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடனான கலந்துரையாடல், ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு, மல்வத்தை மற்றும் அஸ்கிரி மகாநாயக்கர்களைச் சந்தித்தல் ஆகியவையும் இந்த விஜயத்தின் ஒரு பகுதியாகும்.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பார்வையிட்டு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் உள்ள மாகாண ஆளுநர்களுடன் சந்திப்புகள் இடம்பெறும் என வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் இலங்கை வந்தடைந்தார் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க், இன்று (ஜூன் 23) இலங்கையை வந்தடைந்துள்ளார். இது 2016ம் ஆண்டுக்குப் பின்னர், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் மேற்கொள்ளும் முதல் இலங்கைப் பயணமாகும்.ஜூன் 26ம் திகதி வரை இடம்பெறும் இந்த விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சர்கள், மக்களவை உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் இராஜதந்திரர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்திக்கவுள்ளார்.இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடனான கலந்துரையாடல், ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு, மல்வத்தை மற்றும் அஸ்கிரி மகாநாயக்கர்களைச் சந்தித்தல் ஆகியவையும் இந்த விஜயத்தின் ஒரு பகுதியாகும்.மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பார்வையிட்டு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் உள்ள மாகாண ஆளுநர்களுடன் சந்திப்புகள் இடம்பெறும் என வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.