• Sep 19 2024

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கடற்படை வீரர்! இலங்கையில் கொடூரச் சம்பவம் SamugamMedia

Chithra / Feb 20th 2023, 1:19 pm
image

Advertisement

கம்பஹா – அமுனுகொட பிரதேசத்தில் பிறந்த நாள் விருந்தொன்றில் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் உதைத்ததாக கூறப்படும் கடற்படை வீரரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான நான்கு மாத கர்ப்பிணிப் பெண்ணின் கர்ப்பம் கலைந்து சிகிச்சைக்காக பொரளை சொய்சா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 17ம் திகதி சந்தேகநபரான கடற்படை வீரரின் சகோதரியின் வீட்டில் இந்த பிறந்த நாள் விருந்து நடைபெற்றுள்ளது.

அப்போது கடற்படை வீரருக்கும் சகோதரியின் கணவரின் சகோதரர் ஒருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சந்தேக நபர் அவரை காலால் எட்டி உதைத்துள்ளார்.

இது கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் பட்டுள்ளதுடன் பெண் கீழே விழுந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படை வீரர் புல்மோட்டை பிரதேசத்தில் உள்ள கடற்படை முகாமில் கடமையாற்றி வருபவர் என கனேமுல்ல பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார்

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கடற்படை வீரர் இலங்கையில் கொடூரச் சம்பவம் SamugamMedia கம்பஹா – அமுனுகொட பிரதேசத்தில் பிறந்த நாள் விருந்தொன்றில் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் உதைத்ததாக கூறப்படும் கடற்படை வீரரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.தாக்குதலுக்கு உள்ளான நான்கு மாத கர்ப்பிணிப் பெண்ணின் கர்ப்பம் கலைந்து சிகிச்சைக்காக பொரளை சொய்சா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடந்த 17ம் திகதி சந்தேகநபரான கடற்படை வீரரின் சகோதரியின் வீட்டில் இந்த பிறந்த நாள் விருந்து நடைபெற்றுள்ளது.அப்போது கடற்படை வீரருக்கும் சகோதரியின் கணவரின் சகோதரர் ஒருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சந்தேக நபர் அவரை காலால் எட்டி உதைத்துள்ளார்.இது கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் பட்டுள்ளதுடன் பெண் கீழே விழுந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படை வீரர் புல்மோட்டை பிரதேசத்தில் உள்ள கடற்படை முகாமில் கடமையாற்றி வருபவர் என கனேமுல்ல பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement