• Apr 19 2026

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு புதிய வசதி - அமைச்சர் விஜித தகவல்

Chithra / Jan 6th 2026, 9:26 pm
image

 

இலத்திரனியல் பயண அனுமதி திட்டம் இந்த வருடத்தின் முதலாவது காலாண்டில் நடைமுறைப்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

இந்த திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போதும், இதுவரை செயல்படுத்தப்படவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

எனவே இந்த ஆண்டின் முதல் காலாண்டிலிருந்து இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு ஜூலை மாதம், இலங்கை தனது சுற்றுலாத் துறையில் மீட்சியை எளிதாக்கும் முயற்சியில் இலத்திரனியல் பயண அனுமதி திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மேலும் 33 நாடுகளைச் சேர்ப்பதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு புதிய வசதி - அமைச்சர் விஜித தகவல்  இலத்திரனியல் பயண அனுமதி திட்டம் இந்த வருடத்தின் முதலாவது காலாண்டில் நடைமுறைப்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போதும், இதுவரை செயல்படுத்தப்படவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த ஆண்டின் முதல் காலாண்டிலிருந்து இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம், இலங்கை தனது சுற்றுலாத் துறையில் மீட்சியை எளிதாக்கும் முயற்சியில் இலத்திரனியல் பயண அனுமதி திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மேலும் 33 நாடுகளைச் சேர்ப்பதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement