நடைமுறையில் உள்ள மின்கட்டணத்தை எதிர்வரும் ஆறு மாத காலத்துக்கு திருத்தம் செய்யாமல் அமுல்படுத்த வேண்டும் என இலங்கை மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரைத்துள்ளது.
மின்கட்டண திருத்தம் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைத்து மின்சார சபை இந்த பரிந்துரையை ஆணைக்குழுவிடம் முன்வைத்துள்ளது.
பொதுமக்களின் அபிப்ராயங்களை கோரியதன் பின்னர் இந்த பரிந்துரை தொடர்பில் உறுதியான தீர்மானத்தை அறிவிப்பதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க மின்கட்டணத்தின் பிரகாரம் வருடத்தில் இரு தடவைகள் மின்கட்டணத்தை திருத்தம் செய்வதாக கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இருப்பினும் 2023 ஆம் ஆண்டு எரிபொருள் மற்றும் நிலக்கரி ஆகிய மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கருத்திற்கொண்டு வருடத்தில் நான்கு தடவைகள் மின்கட்டணத்தை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
2024 ஆம் ஆண்டு மார்ச் 04 மற்றும் ஜுலை 15 ஆகிய திகதிகளில் மின்கட்டணத்தை திருத்தம் செய்ய இலங்கை மின்சார சபை ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.
இந்த ஆண்டு முன்னெடுக்க வேண்டிய மூன்றாவது மின்கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை மின்சார சபை கடந்த ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவிடம் முன்வைத்திருந்தது.
மூன்றாவது மின்கட்டண திருத்த பரிந்துரையில் மின்கட்டணத்தை நூற்றுக்கு 6 சதவீதத்தால் குறைக்க மின்சாரசபை உத்தேசித்திருந்தது.
இருப்பினும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த யோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை.
பரிந்துரைகளின் தரவுகளில் குளறுபடிகள் காணப்படுவதால் அவற்றை திருத்தி சரியான பரிந்துரைகளை முன்வைக்குமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அறிவுறுத்தியது.
இதற்கமைய மின்சார சபை நேற்று முன்தினம் திருத்தப்பட்ட மின்கட்ட திருத்த யோசனையை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளது.
புதிய திருத்தத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முன்வைக்கப்பட்ட 6 சதவீத மின்கட்டண குறைப்பு இரத்து செய்யப்பட்டு, எதிர்வரும் ஆறு மாத காலத்துக்கு மின்கட்டணத்தை திருத்தம் செய்யாமல் தற்போதைய கட்டண திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்று மின்சார சபை பரிந்துரைத்துள்ளது.
ஆறு மாதங்களுக்கு மின் கட்டணத்தில் திருத்தம் இல்லை மின்சார சபை பரிந்துரை நடைமுறையில் உள்ள மின்கட்டணத்தை எதிர்வரும் ஆறு மாத காலத்துக்கு திருத்தம் செய்யாமல் அமுல்படுத்த வேண்டும் என இலங்கை மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரைத்துள்ளது.மின்கட்டண திருத்தம் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைத்து மின்சார சபை இந்த பரிந்துரையை ஆணைக்குழுவிடம் முன்வைத்துள்ளது. பொதுமக்களின் அபிப்ராயங்களை கோரியதன் பின்னர் இந்த பரிந்துரை தொடர்பில் உறுதியான தீர்மானத்தை அறிவிப்பதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.2009 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க மின்கட்டணத்தின் பிரகாரம் வருடத்தில் இரு தடவைகள் மின்கட்டணத்தை திருத்தம் செய்வதாக கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டது. இருப்பினும் 2023 ஆம் ஆண்டு எரிபொருள் மற்றும் நிலக்கரி ஆகிய மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கருத்திற்கொண்டு வருடத்தில் நான்கு தடவைகள் மின்கட்டணத்தை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.2024 ஆம் ஆண்டு மார்ச் 04 மற்றும் ஜுலை 15 ஆகிய திகதிகளில் மின்கட்டணத்தை திருத்தம் செய்ய இலங்கை மின்சார சபை ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.இந்த ஆண்டு முன்னெடுக்க வேண்டிய மூன்றாவது மின்கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை மின்சார சபை கடந்த ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவிடம் முன்வைத்திருந்தது.மூன்றாவது மின்கட்டண திருத்த பரிந்துரையில் மின்கட்டணத்தை நூற்றுக்கு 6 சதவீதத்தால் குறைக்க மின்சாரசபை உத்தேசித்திருந்தது.இருப்பினும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த யோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை.பரிந்துரைகளின் தரவுகளில் குளறுபடிகள் காணப்படுவதால் அவற்றை திருத்தி சரியான பரிந்துரைகளை முன்வைக்குமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அறிவுறுத்தியது.இதற்கமைய மின்சார சபை நேற்று முன்தினம் திருத்தப்பட்ட மின்கட்ட திருத்த யோசனையை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளது. புதிய திருத்தத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முன்வைக்கப்பட்ட 6 சதவீத மின்கட்டண குறைப்பு இரத்து செய்யப்பட்டு, எதிர்வரும் ஆறு மாத காலத்துக்கு மின்கட்டணத்தை திருத்தம் செய்யாமல் தற்போதைய கட்டண திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்று மின்சார சபை பரிந்துரைத்துள்ளது.