இந்தியாவில் இருந்து இலங்கைக்கு எண்ணெய் குழாய் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் இதுவரைக்கும் மேற்கொள்ளப்படவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
"இது தொடர்பான கலந்துரையாடல்களை ஆரம்பிக்க முன்னர் அது குறித்த அபிவிருத்தி தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதன் சந்தைக்கேள்வி உள்ளிட்டவை தொடர்பில் ஆராய வேண்டும்" என்றும் அவர் தெரிவித்திருந்தார்.