• Sep 17 2024

வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது..!

Sharmi / Sep 5th 2024, 6:07 pm
image

Advertisement

சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான 118 வெளிநாட்டு மதுபான போத்தல்களை மறைத்து வைத்திருந்த கடத்தல்காரர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை இன்று(05) இடம்பெற்றது.

கொழும்பு-13 பிரதேசத்தில் வசிக்கும் மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து லேபிள்-5 ரக விஸ்கி போத்தல்கள் 99 , ப்ளெக் லேபிள் ரக விஸ்கி போத்தல்கள் 14 மற்றும் வெட்-69 ரக விஸ்கி போத்தல்கள் 05 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் கொண்டு வரும் மதுபான போத்தல்களை விமான நிலைய வாகன தரிப்பிடத்தில் வைத்து குறைந்த விலைக்கு கொள்வனவு செய்து, பின்னர் அவற்றை பல்வேறு பிரதேசங்களில் உள்ள சுற்றுலா ஹோட்டல்களுக்கு விற்பனை செய்வதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.



வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது. சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான 118 வெளிநாட்டு மதுபான போத்தல்களை மறைத்து வைத்திருந்த கடத்தல்காரர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நடவடிக்கை இன்று(05) இடம்பெற்றது.கொழும்பு-13 பிரதேசத்தில் வசிக்கும் மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து லேபிள்-5 ரக விஸ்கி போத்தல்கள் 99 , ப்ளெக் லேபிள் ரக விஸ்கி போத்தல்கள் 14 மற்றும் வெட்-69 ரக விஸ்கி போத்தல்கள் 05 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.சந்தேக நபர், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் கொண்டு வரும் மதுபான போத்தல்களை விமான நிலைய வாகன தரிப்பிடத்தில் வைத்து குறைந்த விலைக்கு கொள்வனவு செய்து, பின்னர் அவற்றை பல்வேறு பிரதேசங்களில் உள்ள சுற்றுலா ஹோட்டல்களுக்கு விற்பனை செய்வதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement