• Sep 20 2024

கிளிநொச்சியில் கோர விபத்து - ஒருவர் உயிரிழப்பு ! samugammedia

Tamil nila / Sep 16th 2023, 8:18 pm
image

Advertisement

கிளிநொச்சி பூநகரி பகுதியில் இன்று(16) இடம் பெற்ற விபத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சிமாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த விபத்து  இன்று பிற்பகலில்  இடம்பெற்ற நிலையில்  விபத்தை ஏற்படுத்திய வாகனம் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பினை சேர்ந்த இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது வாகனம் மோதியதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

மற்றுமொருவர் படுகாயம் அடைந்த நிலையில் அங்கு நின்றவர்களால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனம் தொடர்பில் பூநகரி பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

கிளிநொச்சியில் கோர விபத்து - ஒருவர் உயிரிழப்பு samugammedia கிளிநொச்சி பூநகரி பகுதியில் இன்று(16) இடம் பெற்ற விபத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சிமாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.இந்த விபத்து  இன்று பிற்பகலில்  இடம்பெற்ற நிலையில்  விபத்தை ஏற்படுத்திய வாகனம் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.முல்லைத்தீவு புதுக்குடியிருப்பினை சேர்ந்த இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது வாகனம் மோதியதாக கூறப்படுகின்றது.சம்பவத்தில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.மற்றுமொருவர் படுகாயம் அடைந்த நிலையில் அங்கு நின்றவர்களால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனம் தொடர்பில் பூநகரி பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Advertisement

Advertisement

Advertisement