• May 02 2024

போலி பணம் அச்சடித்து போதைப்பொருள் வாங்கிய நபர்கள் கைது...!samugammedia

Sharmi / Jan 8th 2024, 8:42 am
image

Advertisement

போலி 1000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து போதைப்பொருள் வாங்க பயன்படுத்திய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாளிகாவத்தை மற்றும் தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்களிடம் இருந்து 4 போலி 1000 ரூபாய் நோட்டுகள் இருப்பதும், பணம் அச்சடிக்க பயன்படுத்திய பிரிண்டரையும் போலீசார் கைப்பற்றினர்.

சந்தேகநபர்களால் அச்சிடப்பட்ட போலிப் பணத்தை பல்வேறு முறைகளில் வேறு பணத்துடன் மாற்றி பின்னர் ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் கிட்டத்தட்ட 50,000 ரூபாவை கைமாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அளுத்கடை இலக்கம் 04 நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

போலி பணம் அச்சடித்து போதைப்பொருள் வாங்கிய நபர்கள் கைது.samugammedia போலி 1000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து போதைப்பொருள் வாங்க பயன்படுத்திய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.மாளிகாவத்தை மற்றும் தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.அங்கு அவர்களிடம் இருந்து 4 போலி 1000 ரூபாய் நோட்டுகள் இருப்பதும், பணம் அச்சடிக்க பயன்படுத்திய பிரிண்டரையும் போலீசார் கைப்பற்றினர்.சந்தேகநபர்களால் அச்சிடப்பட்ட போலிப் பணத்தை பல்வேறு முறைகளில் வேறு பணத்துடன் மாற்றி பின்னர் ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.மேலதிக விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் கிட்டத்தட்ட 50,000 ரூபாவை கைமாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அளுத்கடை இலக்கம் 04 நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement